Monday, December 5, 2011

ஐயப்பா நீ பொய்யாப்பா!!!!!!!!!!!!!!!

பம்பை நதி பாலகனே
மாசில்லா மனிகண்டனே
சபரிமலை வாசனே
ஐயம் தீர்க்கும் ஐயப்பனே ......
சபரி மலைலேயே குடி இருக்கும்
ஐயப்பனே உனக்கு அவர்களின்
ஐயம் தீர்க்க சக்தில்லையோ .....
இல்லை நாடிவருபவர்களை
ஏமாற்றுவதில் வல்லவனோ நீ ......
முல்லைப் பெரியாற்றின்
சிக்கலை சீர்செய்ய முடியாதவனா
நீ ....
உனக்கு இருமுடி எதற்கு ....
உன்னைப் பெற்ற பரமசிவனும்
பார்வையற்றுப் போனானோ ........
இல்லை அவனும் பலனற்று போனானோ ????
தமிழனுக்கு நீர் வழங்குவதற்கு .....
-----முரளிகிருஷ்ணன் சின்னதுரை