Thursday, February 24, 2011

என்னுள் நீ,,,


Tuesday, February 15, 2011

ஹைக்கூ கவிதைகள்


ஏவுகணை சோதனை வெற்றி
விலைவாசி குறைப்பில் தோல்வி
இந்தியா

அறிவு விளக்கை அணைத்து விட்டு
அணையா விளக்கு
காமராசருக்கு

தூரத்தில் தர்ம தரிசனம்
அருகில் நடப்பது
அதர்ம தரிசனம்

லஞ்சம் ஒழிப்பவரே
லஞ்சம் வாங்கி கைது
காவல்துறை

ஏறும் விலைவாசி
இறக்கிட யோசி
மக்கள் விருப்பம்

அன்று ஊறுகாய்
இன்று சாப்பாடு
திரைப்படங்களில் ஆபாசம்

நாட்டில் ஓடியது
தேனும் பாலும்
திருப்பதிக்கு தங்கக் கோபுரம்

பேச ஆரம்பித்தனர்
மதுவிலக்கு
அருகில் தேர்தல்

வெற்றி பெற்றன
ஊடகங்கள்
பண்பாட்டுச் சீரழிப்பில்

போதித்தன
மிருக குணம்
தொ(ல்)லைக்காட்சித் தொடர்கள்

குடிபோதையில்
குடும்பத்தலைவன்
தள்ளாடும் குடும்பம்

வந்தாரை வாழ வைத்தே
வீடு இழந்தவன்
தமிழன்

கூழ் இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
வாழ்க இந்தியா

சக நடிகர் கைது
கண்டிக்காத திரைஉலகம்
சுயநலவாதிகள்

Thursday, February 10, 2011

மறைவு


Join Only-for-tamil
சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.
இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
 சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

புதினங்கள்
பதவிக்காக, ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம், அனிதாவின் காதல்கள், எப்போதும் பெண்,
என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நிலா நிழல், ஆ, கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, கொலையுதிர் காலம், வசந்த் வசந்த், ஆயிரத்தில் இருவர், பிரியா, நைலான் கயிறு, ஒரு நடுப்பகல் மரணம், மூன்று நிமிஷம் கணேஷ், காயத்ரி
கணேஷ் x வஸந்த், அப்ஸரா, மறுபடியும் கணேஷ், வீபரீதக் கோட்பாடுகள், அனிதா இளம் மனைவி, பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு, வசந்தகாலக் குற்றங்கள், வாய்மையே - சிலசமயம் - வெல்லும், கனவுத்தொழிற்சாலை,
ரத்தம் ஒரே நிறம், மேகத்தைத் துரத்தினவன், நிர்வாண நகரம், வைரம், ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம்,
உன்னைக் கண்ட நேரமெல்லாம், நில்லுங்கள் ராஜாவே, எதையும் ஒருமுறை, செப்டம்பர் பலி, ஹாஸ்டல் தினங்கள்,
ஒருத்தி நினைக்கையிலே, ஏறக்குறைய சொர்க்கம், என்றாவது ஒரு நாள், நில் கவனி தாக்கு, காந்தளூர் வசந்தகுமாரன் கதை, பெண் இயந்திரம், சில்வியா"

குறும் புதினங்கள்
ஆயிரத்தில் இருவர் ,தீண்டும் இன்பம், குரு பிரசாத்தின் கடைசி தினம், ஆகாயம். சிறுவர் இலக்கியமாக பூக்குட்டி.
சிறுகதைத் தொகுப்புக்களாக
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், நிஜத்தைத் தேடி சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்பு களாக நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கவிதைத் தொகுப்புக்களாக நைலான் ரதங்கள்

நாடகங்கள்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், பாரதி இருந்த வீடு, ஆகாயம்

கட்டுரைத் தொகுப்புகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5], கடவுள் இருக்கிறாரா, தலைமை செயலகம், எழுத்தும் வாழ்க்கையும், ஏன் ? எதற்கு ? எப்படி ?, சுஜாதாட்ஸ், இன்னும் சில சிந்தனைகள், தமிழ் அன்றும் இன்றும், உயிரின் ரகசியம், நானோ டெக்னாலஜி, கடவுள்களின் பள்ளத்தாக்கு, ஜீனோம், திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும், ஆனந்த தாண்டவம்

பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ்
வரலாறு (திரைப்படம்), செல்லமே


உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 அன்று மறைந்தார்.  இவருக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர்.

சாயிபாபா

மறைவு


Join Only-for-tamil
சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார்.
இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் அவர் பல வாசகர்களை கவர்ந்துள்ளார்.
 சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் சுஜாதா.

வாழ்க்கைக் குறிப்பு
ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.

அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணராக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

புனைபெயர்
இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

ஆக்கங்கள்
சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

புதினங்கள்
பதவிக்காக, ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம், அனிதாவின் காதல்கள், எப்போதும் பெண்,
என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நிலா நிழல், ஆ, கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, கொலையுதிர் காலம், வசந்த் வசந்த், ஆயிரத்தில் இருவர், பிரியா, நைலான் கயிறு, ஒரு நடுப்பகல் மரணம், மூன்று நிமிஷம் கணேஷ், காயத்ரி
கணேஷ் x வஸந்த், அப்ஸரா, மறுபடியும் கணேஷ், வீபரீதக் கோட்பாடுகள், அனிதா இளம் மனைவி, பாதிராஜ்யம்
24 ரூபாய் தீவு, வசந்தகாலக் குற்றங்கள், வாய்மையே - சிலசமயம் - வெல்லும், கனவுத்தொழிற்சாலை,
ரத்தம் ஒரே நிறம், மேகத்தைத் துரத்தினவன், நிர்வாண நகரம், வைரம், ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம்,
உன்னைக் கண்ட நேரமெல்லாம், நில்லுங்கள் ராஜாவே, எதையும் ஒருமுறை, செப்டம்பர் பலி, ஹாஸ்டல் தினங்கள்,
ஒருத்தி நினைக்கையிலே, ஏறக்குறைய சொர்க்கம், என்றாவது ஒரு நாள், நில் கவனி தாக்கு, காந்தளூர் வசந்தகுமாரன் கதை, பெண் இயந்திரம், சில்வியா"

குறும் புதினங்கள்
ஆயிரத்தில் இருவர் ,தீண்டும் இன்பம், குரு பிரசாத்தின் கடைசி தினம், ஆகாயம். சிறுவர் இலக்கியமாக பூக்குட்டி.
சிறுகதைத் தொகுப்புக்களாக
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், நிஜத்தைத் தேடி சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்பு களாக நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கவிதைத் தொகுப்புக்களாக நைலான் ரதங்கள்

நாடகங்கள்
Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார், பாரதி இருந்த வீடு, ஆகாயம்

கட்டுரைத் தொகுப்புகள்
கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5], கடவுள் இருக்கிறாரா, தலைமை செயலகம், எழுத்தும் வாழ்க்கையும், ஏன் ? எதற்கு ? எப்படி ?, சுஜாதாட்ஸ், இன்னும் சில சிந்தனைகள், தமிழ் அன்றும் இன்றும், உயிரின் ரகசியம், நானோ டெக்னாலஜி, கடவுள்களின் பள்ளத்தாக்கு, ஜீனோம், திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும், ஆனந்த தாண்டவம்

பணியாற்றிய திரைப்படங்கள்
ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ்
வரலாறு (திரைப்படம்), செல்லமே


உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 அன்று மறைந்தார்.  இவருக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர்.

சாயிபாபா

Tuesday, February 8, 2011

அவளால்..


Join Only-for-tamil
விழி மூடி எனக்குள் பேசும் மௌனம்

உடைந்த இதயத்தை அள்ளி
ஒட்டுப் போட்டுக் கொண்டு
மனம் தவிக்குது எதற்காக?

யோசிக்கிறேன்....
பூமியில் பாதம்  பரப்பிய தேவதை
என் முன் கடந்து சென்றதால்
மின்னல் மின்னி
 இடி இடித்தது என் நெஞ்சுக்குள்

இதுவரை நான் காணாத
புரியாத உலகம்
என் முன் கடந்து போனதை
 கண் இமைக்காமல் பார்த்தேன்.

ஆணி வேராக என்இதயத்தை
தாக்கிவிட்டுச் சென்றவள்
காணும் காட்சிகள் யாவும்
அவள் பிம்பமாக மாற்றி விட்டாள்.

எவ்வளவு முயன்றாலும்
அவள்  நினைவுகளில்
இருந்து நீந்தாமல்
இருக்க முடியவில்லை.

என் நினைவு அலைகளில்
அவள் கடல் அலைகளாக
நான் துடுப்பு இல்லை...
 படகோட்டியாக.

அன்புடன்,
ஸ்ரீமாரியா.

Monday, February 7, 2011

காதலின் நிலைகள் மூன்று..!


காதலின் ஆரம்ப நிலையில்


தனிமையில் சிரிப்பாய்!


கண்ணாடியின் தடிமன்
உன் பிம்பத்தால் மெலியும்!

சீப்பின் பற்கள் பழுதடைந்து போகும்!

ஒழுக்கம் கடை பிடிப்பாய்!

ஒரேநாளில் பலமுறை
அலங்கரித்து கொள்வாய்!

உன்னவள் பவனி வரும்
தெருமுனைகளின் பிள்ளையார்க்கு
நண்பனாவாய்!

உன் தூக்கம் குறையும்!
 பசியின் புனிதம் புரியும்!

நீ தேவனாவாய்,
உன்னவள் தேவதையாவாள்,
உங்கள் தெரு பிள்ளைகள்
உங்களுக்கு தூதுவர்கள் ஆவார்கள்!

சிறகில்லாமல் பறக்கச் செய்வாய் !

சில எதிரிகளும் முளைத் தெழுவர்......!


காதலின் இடை நிலையில்



எதிரிகளின் வாயில்

அகப்பட்ட அவலாகிப்போவாய்!


சுற்றத்தாரின் வார்த்தைகளே

உன்னை வதக்கி, வறுத்தெடுத்துவிட,

போர்களத்தில் எதிரிகள் எய்த

அம்புகள் துளைத்த போர்வீரன்

போல் உணர்வாய்!

உன் உள்ளத்தில்
இடி இடிக்கும்!

கண்களில் மழை
சொரியும்!

வற்றாத ஜீவ நதிகள் இரண்டு

கன்னங்களில் வழிந்தோடி

கால் நோக்கி பிரயாணப்படும்!

மௌனம் உன் தேக தேசத்தின்

சிறப்பு மொழி ஆகிப்போகும்!

சிரிப்பு கானல் நீராய்க்

காணமல் போகும்!

அழவேண்டி மட்டுமே
கழிவறைக்கதவை
தாழிட்டு கொள்வாய்!

நமுட்டு சிரிப்பும்,ஏளன பேச்சும்
அறிவுரைகளும் உனக்காய்
பிரதானமாகிப்போகும்!

முட்கிரீடம் தலைசூடி
காதலை நோக்கி
கடும்தவம் புரிவாய்!

காதலை
அணுகவும் இயலாமல்
அகலவும் இயலாமல்
நரக நெருப்பில்
கால்புதைத்தவனாய்
துடிதுடித்துப்போவாய்..........!


காதலின் கடை நிலையில்



சூழ்நிலையை மாற்றியமைக்கும்

சக்திகொள்வாய்!



சமுக மூட தனத்தை

முறியடித்து!

ஜாதி,மத,பேத

தடைகளைத் தவிடு பொடியாக

தகர்த்தெறிந்து !

காற்றினில் கலந்த வாசமாய்,
கடலினில் கலந்த மழைத்துளியாய்
காதல் ஜோதியில் கலந்து,
காதல் தேசத்து மன்னனாவாய்!

வாழ்கை அழகுபெற,
வாழ்கை அர்த்தப்பட
காதலியுங்கள்....!


-நவீன் மென்மையானவன்