Monday, January 31, 2011
Monday, January 24, 2011
சென்னை
சென்னை
அலைபுரளும் கடலோரம் அமைந்த சிங்கார நகரம் சென்னை, ஒரு காலத்தில் ஜட்கா வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. கூவம் நதியில் படகு சவாரி, ஏரிக்கரைகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆங்கிலேய துரைமார்களின் ஆசைக்குரிய பட்டணமாக இருந்தது சென்னை. இன்று வாய்ப்புகளின் வசீகர நகரமாக மாறியிருக்கிறது. ஃபோர்டு, ஹூண்டாய், லேன்சர் வெளிநாட்டு சொகுசு கார்களின் உற்பத்தி நகரமாக உருவெடுத்திருக்கிறது கலைகளின் தாயகமான தமிழகத்தின் தலைநகரம். ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் , கட்டடக்கலை, பழமை மாறாத நவீன நகரம் சென்னை. திராவிட நாகரிகத்தின் கருவறை, புதுமையின் காற்று வீசினாலும் சென்னையில் இன்றும்கூட புராதனம் புழக்கத்தில் இருக்கிறது. இன்று அது தகவல் தொழில்நுட்ப மாநகராகவும் உயர்ந்து நிற்கிறது.
அண்ணாநகர் கோபுரம்
முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணாநகர் கோபுரம் பூங்காவிற்குப் போய் வந்தால் போதும். இங்குள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமும், பெரியதும் ஆகும். சுருள் வடிவில் அமைந்த படிக்கட்டுகளில் நடந்து செல்வதே ஒரு சுகானுபவம். அதன் உச்சியில் நின்று முழு நகரத்தின் அழகையும் பார்க்கலாம். இதுவொரு நிற்கும் விமானமாக நகரைச் சுற்றிக்காட்டும் அதிசயம். ஒத்தை ரூபாயில் ஊரைப் பார்க்கும் ஆனந்த அனுபவம்.
அமைவிடம்:- அண்ணாநகர் ரவுண்டானா அருகில், சென்னை 600 040. நுழைவுக் கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1. நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது.
பிர்லா கோளரங்கம்
பெரிய நூலரங்கம் உருவாக்கும் அறிவுத் தேடலை இந்த பிர்லா கோளரங்கம் எளிதாகத் தொடங்கி வைத்துவிடும். அறிவியல் நுட்பத்தை அருகிருந்து பார்க்கும் வசதி கொண்டது. அண்ணாந்து பார்த்து ஆச்சரியப்படும் விண்வெளியைத் தொலைநோக்கியின் வழியே பார்த்துத் தெளியலாம். வானவெளி ஆச்சரியங்கள் குழந்தைகளின் விழித்திரைக்கு அருகிலேயே மாதிரி வடிவங்களைக் கொண்டு நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. கேள்விகளில் துளைக்கும் குழந்தைகள் பார்வையின் வழியே பதில்களைப் பருகிப் போகலாம். குழந்தைகளின் மனவுலகின் ரகசியங்களுக்கு பிர்லா கோளரங்கம் அறிவுலக ஞானம் தருகிறது. கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அருகிலுள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் இது செயல்படுகிறது.
நேரம்:- நிகழ்ச்சி நிரல் (ஆங்கிலத்தில்) காலை 10.45, மதியம் 1.15 மற்றும் 3.45. தமிழில் மதியம் 12 மணி மற்றும் 2.30 மணி.
நுழைவுக்கட்டணம் பெரியவர் ரூ.20. சிறுவர் ரூ.10. தொலைபேசி:- 24410025.
அமீர் மகால்
அரண்மனை என்ற சொல்லிற்கு சென்னைக்குள்ளேயே ஓர் அடையாளம் அமீர் மகால். ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது.
1789 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1870 இல் ஆற்காடு அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று. நவாப் அரசர்களின் கலை மனங்களை இந்த மகாலின் கலையெழில் கொஞ்சும் தூண்களே சொல்லும். இங்கு வந்து பார்த்தவர்கள் பரவசம் கொள்ளாமல் திரும்பவே முடியாது. முஸ்லிம் மன்னர்களின் மனத்திற்குரிய மகாராணிகள் தம் கனவுகளை அடைகாத்த அந்தப்புரங்கள் இந்த மகாலில் இருக்கின்றன. கொஞ்ச நேரம் நீங்களும் ஒரு மன்னராக உலா வந்து பார்க்க ஒரு வசதி.
அமைவிடம் மகாகவி பாரதிசாலை, (பைகிராப்ட்ஸ் ரோடு) திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. பார்வையிடும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை கிடையாது. அனுமதி பெற்றுப் பார்வையிட வேண்டும். தொலைபேசி:- 28485861
கன்னிமாரா பொது நூலகம்
மர நிழல்கள் அடர்ந்த சோலைக்குள் இருக்கிறது கன்னிமாரா நூலகம். ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய கட்டடங்களில் குட்டி நகராகத் தோன்றும் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்று. மிகப்பழமையான கட்டடத்தில் இயங்கும் நூலகம். நவீன வசதிகள் கொண்டது. தொடுதிரைக் கணினி நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு மிகப் பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றக்கூடிய சூழல் அமையப் பெற்ற மிகப்பெரும் நூலகம். சென்னையின் பெருமைமிகு இடங்களில் இதுவும் ஒன்று.
அமைவிடம் பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை-8. அனுமதி இலவசம். தேசிய விடுமுறை நாட்கள் விடுமுறை. பார்வையாளர் நேரம்:- காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. தொலைபேசி 28193751.
எலியட்ஸ் கடற்கரை
அதிகாலையையும் அந்தி மாலையையும் எலியட்ஸ் கடற்கரையில் நடந்தபடி ரசித்தாலே ஆயுளுக்கும் போதும். நீண்ட மணற்பரப்பும் வானம் தொடும் நீர்ப்பரப்பும் மனத்தில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கும். அருகருகே வேளாங்கண்ணி தேவாலயமும் அஷ்டலட்சுமி கோயிலும் எனக் கடலருகே சமரச சன்மார்க்கம். அலையடிக்கும் எலியட்ஸ் கடற்கரையில் ஆன்மிக காற்றும் வீசுகிறது. கொஞ்சம் காற்றை வாங்கிக் கொண்டே கொஞ்சும் கடலை ரசித்து வரலாம். இளமைக்கு ஏற்ற கடற்கரை இது. அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம். சென்னையின் தெற்குப் பகுதியில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டை
ஆங்கிலேயர்கள் கப்பலேறிப் போய்விட்டார்கள். ஆனால் அகிலத்தையும் அரசாள நினைத்த அவர்கள் கட்டிய கோட்டைகள் இன்றும் நமக்கு அரசாண்ட நினைவுகளை உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதிலொன்றுதான் புனித ஜார்ஜ் கோட்டை. கடற்கரையோரம் ஏதோ பெரிய மதிற்சுவர் போலத் தோன்றும் இந்தக் கோட்டைக்குள் ஆயிரம் அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றன. அன்று ஆங்கிலேயர்கள் ஆண்ட புனித ஜார்ஜ் கோட்டையில்தான் இன்று நமது ஜனநாயகம் மலர்ந்து வருகிறது. ஆங்கிலேய ஆட்சியின் பழம்பெரும் நினைவுச் சின்னம். நாற்புறமும் அகழியுடன் அரைவட்ட வடிவில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளார்கள். அகழிகளின் பாதைகளும் கோட்டைச் சுவர்களும் அழியாத காலத்தின் சுவடுகள். மாநில சட்டமன்றப் பேரவை தலைமைச் செயலகம் ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் உண்டு. இராபர்ட் கிளைவுக்குத் திருமணம் நடந்ததாகக் கருதப்படும் ஒரு தேவாலயமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.
அமைவிடம்:- புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். விடுமுறை:- சனி ஞாயிறு மற்றும் தேசிய விடுமுறை நாட்கள். தொலைபேசி 25665566.
கோட்டை கொடிமரம்
கொடிகள் அசையும் காற்றசையும் மரங்களுக்கிடையில் கொடிமரங்களும் அழகுதான். புனித ஜார்ஜ் கோட்டையில் விண்ணைத் தொட முயற்சிக்கும் இந்தக் கொடிமரத்தை அண்ணாந்து பார்த்தால் கழுத்தைச் சுளுக்க வைக்கும். இதில் தினமும் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பட்டொளி வீசிப் பறப்பது தனி அழகுதான். சுதந்திரத் தினத்தன்று மலர்கள் வானிலிருந்து தூவப்பட்டு, குண்டுகள் அதிர, தமிழக முதலமைச்சரால் கொடி ஏற்றப்படும் தருணம் பொன்னானது. அப்போது கொடி மேடை கம்பீரத்தில் மிளிரும். தொலைக்காட்சிகளில் பார்த்தது போதும். எல்லோரும் ஒருமுறை நேரில் சென்று கட்டாயம் பார்க்க வேண்டியது இந்தக் கொடிமரம்.
உயர் நீதிமன்றம்
நேப்பியர் பாலமும் உயர் நீதிமன்றக் கட்டடங்களும் திரைப்படம் தொலைக்காட்சிகளில் பார்த்து சலித்திருப்பீர்கள். நேரில் ஒருமுறை பார்க்கலாம் என்று மனத்தில் ஆசை முளை விட்டிருக்கும். சென்னை மாநகரின் மற்றொரு அடையாளமல்ல இது. மாபெரும் அடையாளம். உயர்நீதிகள் பிறக்கும் இடமான இது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். 1892-ம் ஆண்டு இந்திய-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு அருகிலுள்ள இந்த வளாகத்தில்தான் சட்டக் கல்லூரியும் அமைந்துள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் சின்னச் சின்ன படிக்கட்டுகளிலும் கூட மரபார்ந்த கட்டடக்கலையின் மகத்துவங்களைப் புரிந்து கொள்ளலாம். வழக்குகள் இல்லாமலும் இந்த வளாகத்திற்குள் போய் வரலாம்.
பாரிமுனைக்கு அருகில் உயர் நீதிமன்றம் அமைந்துள்ளது. அனுமதி இலவசம். விடுமுறை நாட்கள் சனி, ஞாயிறு. வார நாட்களில் அனுமதி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி- 25210543.
சென்னைப் பல்கலைக் கழகம்
மெரினா கடற்கரைச் சாலையில் கல்விக்காக ஒரு கலங்கரை விளக்கம். எழில்மிகு கட்டடங்களின் மகுடமாக விளங்கும் சென்னைப் பல்கலைக்கழகம் 1857-இல் தொடங்கப்பட்டது. சிப்பாய்க் கலகம் என அழைக்கப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தின் நெருக்கடியான ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியக் கல்வித்துறையில் முதன்மையான இடம் இதற்குண்டு. லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டம், மருத்துவம், அறிவியல், கலை என பல்துறைகளின் ஞானபீடமாக விளங்குகிறது. இதனுள்ளே உயர்கல்வியின் சல்லிவேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. பலர் படித்த இடம். படிக்கும் இடம். நாம் பார்க்க வேண்டிய இடம்.
அமைவிடம்:- சேப்பாக்கம் அண்ணா நினைவகம் எதிரே, சென்னை - 600 005. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு.
கலா சேத்ரா
கலைகளின் சேத்ரம். விழுதுகளிறங்கிய பழமையான கலை ஆலமரம். பசுமையின் நிழலில் நாத லயங்களின் இசையில், நதிகளின் அசைவில் உங்களையே மறந்துவிடுவீர்கள். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் நிற்கும் நகரில்தான் நாட்டியமும், இசையும் நர்த்தனம் புரியும் இடமுமாக கலா சேத்ரா இருக்கிறது. இங்கு மரபும் பாரம்பரியமும், நவீனமும் சேர்ந்து நாளும் பொழுதும் கலைகள் வளர்கின்றன. கலைக்காகவே வாழ்ந்து மறைந்த ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936-இல் தொடங்கப்பட்டது கலாசேத்ரா. பரதம் மற்றும் பிற நாட்டியங்களை தினம் கலைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதை மீளுருவாக்கம் செய்யும் உயரிய நோக்குடன் திருமதி.ருக்மணி தேவி தொடங்கியிருக்கிறார். சுரங்க வகை கலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மர நிழல்களின் கீழே திறந்த வெளியில் பழங்கால குருகுல முறையில் பல்கலைகளும் கற்பிக்கப்படுகிறது இதன் சிறப்பு. அதோ இசையின் அதிர்வுகள் காதில் விழுகின்றன.
அமைவிடம்:- திருவான்மியூர், சென்னை - 600 041. அனுமதி இலவசம். நேரம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை இல்லை. தொலைபேசி - 24521169.
கலங்கரை விளக்கம்
மெரினாவின் உயரமான ஆரம்பப் புள்ளியாக நிற்பது கலங்கரை விளக்கம். மீனவர்களின் வழிகாட்டியான இந்த நீண்ட நெடிதுயர்ந்த கலங்கரை கோபுரம் கடற்கரையின் தெற்குக் கோடியில் அமைந்துள்ளது. தங்க மணற் பரப்புக்கு வாளிப்பான அழகை அள்ளி வழங்குகிறது. இந்த நிற்கும் நெடுமரம். இங்கிருந்து இரவில் சுழலும் ஒளிவிளக்கு வானத்து நிலவுக்குக்கூட வழி காட்டும். கடற்கரை வாசிகளுக்கு இது அழகின் அடையாளம். வழி தவறும் கட்டுமரங்களுக்கு இது ஒரு வழிகாட்டும் ஒளி மரம்.
அமைவிடம்:- காமராஜர் சாலை, மைலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24985598
மெரினா கடற்கரை
தன்னைத் தேடி வந்தவர்களையெல்லாம் மடியில் வைத்துத் தாலாட்டும் வங்காள விரிகுடா கடல். நகர வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்தி இளைப்பாற நினைப்பர்வர்களின் இலவசப் பூங்கா. மணற்பரப்பின் நீளம் 13 கி.மீ. உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை இதுதான். நடக்க நடக்க காற்றின் சுகம் மெய்மறக்க வைக்கும். அதிகாலை நேரத்தில் மெரினா நடை மனிதர்களால் கலகலக்கும். 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்களின் அழகிய வேலைப்பாடுமிக்க சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன. மெரினாவின் அடையாளம் உழைப்பாளர் சிலைத் தொகுப்பு. கூட்டுழைப்பு, ஊக்கம் உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் தீவிர கவனத்தில் மெரினாவின் அழகு கூடிக்கொண்டேபோகிறது. அலைகள் உரசும் கரையில் நின்றபடி கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாமே? காசா பணமா!
போர் வெற்றி நினைவுச் சின்னம்
கடற்கரை சாலையைக் கடந்து போகும்போது தீவுத்திடல் அருகில் உங்கள் கண்ணில் படும் இந்த நினைவுச் சின்னம். அதை ஏதோ கல்தூண் மண்டபம் என்று நினைத்து கடந்து விடாதீர்கள். நிதானம் காட்டி நின்று பாருங்கள். இங்கே நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களின் ஆன்மாக்கள் உறங்கிக் கொண்டிருக்கின்றன. முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்த் துறந்த சென்னை ராஜதானியைச் சேர்ந்தவர்களின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்காக காலத்தால் வரலாறு கரைந்து போகாமல் இருப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வருகையும் கூட ஒரு வரலாறுதான். சென்று பாருங்கள்.
அமைவிடம்:- காமராஜர் சாலை (கடற்கரைச் சாலை) தீவுத்திடல் அருகில், சென்னை - 600 009.
நேப்பியர் பாலம்
சென்னை என்றதும் மனத்தில் நிழலாடும் சித்திரங்களில் நேப்பியர் பாலமும் ஒன்று. அதன் வளைவுகள் விசித்திரமானவை. ஆங்கிலேயர்களின் கலைத் திறனில் பாலம் கூட ரசனை மிகுந்த படைப்பாக மாறியிருக்கிற அதிசயம் இது. மெரினா கடற்கரையிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாகத்தான் இருந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்குக் காலத்தால் அழியாத சான்றாக இப்பாலம் இருக்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.
வட்டார இருப்புப்பாதை காட்சி சாலை
சிறுவயது ஞாபகங்களில் ரயில் பயணங்களும், யானை பார்த்து ஆச்சரியப்பட்ட பொழுதுகளும் மறக்க முடியாதவை. ரயிலில் பயணம் செய்த நாம் அதன் வளர்ச்சியின் காட்சிக் கூடத்தைப் பார்க்காமல் இருந்தால் எப்படி? சென்னை பெரம்பூர் அருகே உள்ள இரயில் பெட்டி தொழிற்சாலை மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் அமைந்துள்ளது. உட்புறக் காட்சிக் கூடத்தில் எண்ணற்ற சிறு காட்சி அமைப்புகள் வகை மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியன இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர் முதல் முதியவர் வரை இந்தக் காட்சிச் சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. குழந்தைகள் பார்த்து ரசித்த ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ரயில் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
அமைவிடம்:- நியூ ஆவடி ரோடு, ஐ.சி.எஃப் பஸ் நிறுத்தம் அருகில், சென்னை - 600 038. நுழைவுக் கட்டணம் பெரியோர் ரூ.5 சிறுவர் ரூ.3 விடுமுறை திங்கள் கிழமை. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி - 26146267.
ராஜாஜி மண்டபம்
நினைக்கும் போதெல்லாம் அதன் பிரமாண்டம் உங்களை சற்றே அசர வைத்துவிடும். நீண்ட அகலமான படிக்கட்டுகளும் பெருந்தூண்களும் ஆங்கிலேயர்களின் கட்டடக் கலை சாதனையை கண்கள் முன் விரிக்கின்றன. இம்மண்டபத்தின் விசாலமான பரப்பும் கலையழகும் பழங்காலத்திற்குப் பயணிக்க வைத்துவிடும். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் நினைவாக எழுப்பப்பட்டது இந்த மண்டபம். பல்வேறு சரித்திரச் சம்பவங்களின் மௌன சாட்சியாகக் கம்பீரம் காட்டும் இம்மண்டபம், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த இராஜாஜியின் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறது. இது பொது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படும் இடங்களில் முக்கியமானதாக விளங்குகிறது. நீங்கள் கட்டாயம் பார்த்துப் பரவசப்பட வேண்டிய இடம் இது.
அமைவிடம்:- ஓமந்தூரார் அரசினர் தோட்டம். ஹிந்து நாளிதழ் கட்டட எதிர்ப்புறம், அண்ணாசாலை, சென்னை - 600 002. தொலைபேசி - 25365635.
ரிப்பன் மாளிகை
தும்பை பூ நிற தூய்மை நிறத்தில் பளபளக்கும் கட்டடம் ரிப்பன் மாளிகை. வெள்ளை நிறப்பெட்டிகளை அடுக்கியது போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்டது. இந்திய தன்னாட்சியின் தந்தை என்று போற்றப்படுகிற ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றமும் அதன் ஆட்சிக் குழுவும் இம்மாளிகையில் இயங்குகின்றன.
அமைவிடம்:- பூங்கா மின் இரயில் நிலையம் எதிர்ப்புறம், சென்னை - 600 003. நேரம்:- காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. விடுமுறை சனி, ஞாயிறு. தொலைபேசி - 25384510 - 25384670.
பிரம்மஞான சபை
தனிமையும் அமைதியும் தவழும் இடத்தில்தான் தத்துவம் பிறக்கும். விதையிலிருந்து உயிர்தெழுந்த பூமிப்பரப்பு முழுவதையும் விழுதுகளால் அரவணைத்து செழித்து நிற்கும் அடையாறு ஆலமரத்தைப் போலவே பழமையானது பிரம்மஞான சபை. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி சீமாட்டி மற்றும் கலோ ஆல்காட் ஆகியோரால் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் மதம் மற்றும் தத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கானது. 1892 இல் அடையாறில் மரங்களடர்ந்த இயற்கைச் சூழல் அமைந்த இடத்துக்கு இச்சபை மாற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பசுமை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் இந்த ஆல விருட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளன. இங்குள்ள நூலகம் பழம் பெருமைமிக்கது. பல அரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. ஞானம் தேடும் மனிதர்களுக்கு இது ஓர் இயற்கையின் போதி மரம். இங்கு இளைப்பாறுவோர் எல்லாம் தத்துவ ஞானம் பெறுவார்கள்.
அமைவிடம்:- அடையாறு, சென்னை - 600 020. அனுமதி இலவசம். நேரம் காலை 8.30 முதல் 10 மணி வரை. மதியம் 2 மணி முதல் 5 மணி வரை. ஞாயிறு விடுமுறை. தொலைபேசி - 24912474.
Saturday, January 22, 2011
Monday, January 17, 2011
Saturday, January 15, 2011
உலக சுவராஸ்யமான தகவல்கள் : அறிஞர் அண்ணா-வின் பேச்சாற்றல் ( Panithuli shankar Articals 13 January 2011 )
அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த உலக சுவராஸ்யமான தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் பேச்சாற்றல் பற்றியது. பேச்சாற்றல் பலருக்கு இதன் அர்த்தம் தெரிவதில்லை. நம்மில் பலர் எல்லோரும்தான் பேசுகிறோம் இதில் என்ன சிறப்பு என்று தவறான கண்ணோட்டத்தில் இன்றும் இந்த பேச்சாற்றல் பற்றிய குறுகிய கண்ணோட்டத்தில் வர்ணிப்பதுண்டு. பொதுவாக நம்மில் பலருக்கு நன்றாகப் பேசத் தெரியும். ஆனால் அதே பேச்சை பலர் முன்போ அல்லது மேடைகளிலோ அரங்கேற்றி பேச அழைத்தால் நம்மில் பலருக்கு பயம் என்ற ஒன்று பக்கத்தில் உருட்டுக் கட்டைகளுடன் நிற்பது போன்ற ஒரு உணர்வு பலருக்கு தோன்றும். இன்னும் சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு இவர் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர் என்று கூட எண்ணம் தோன்றும். இது போன்ற மனிதர்கள் மேடைகளில் பேச தொடங்கினால் இடி முழக்கதைப் போன்ற ஒரு பேச்சாற்றல் படைத்தவர்களாக எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் தனது வார்த்தைகளின் ஜாலத்தால் வசியம் செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் நம்மில் பலர் எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்போம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பேசுகின்றோம் என்றே புரியாத அளவிற்கு ஐந்து நிமிடங்களில் ஐநூறு பக்கம் வாசிக்க சொன்னால் ஏற்படும் வேகத்தில் பேசுவார்கள். இதுபோன்றவர்களைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த தெருவில் விழுந்து ஓடி தப்பித்துவிடத் தோன்றும் அந்த அளவிற்கு பயங்கரமான அறுவை பேராளியாக இருப்பார்கள். இன்னும் சிலர் பேசுகின்றேன் என்ற பெயரில் உதடுகளை மட்டுமே அசைப்பார்கள். என்னங்க சத்தமே வரவில்லை என்று கேட்டால் நான் எப்பொழுதும் மென்மையாகத்தான் பேசுவேன் என்று சொல்லி கேட்பவர்களை கொலைவெறியாக்குபவர்களும் உண்டு.
இன்னும் சிலர் பேசினால் அவர்களின் கேள்விகளுக்கு யாரும் எதிர்த்து பதில் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக ஆராய்ந்து பொருள்பட பேசுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் பிறர் தவறு என்று சொல்லி வாதிடும் வார்த்தைகளைக் கூட, தங்களின் பேச்சுத் திறமையால் தன் வசப்படுத்தி, மீண்டும் சரிதான் என்று சொன்னவர்களே உணரும் அளவிற்கு மிகவும் தெளிவான மதி நுட்பத்துடன் வாதிடும் திறமைப் படைத்தவர்கள் என்று சொல்லலாம். உதாரணமாக தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த வகையே என்று சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நம்மைப் போன்றவர்களிடம் அதிக கூட்டம் நிறைந்த இடத்தில் யாரேனும் ஒருவர் நமது தவறை சுட்டி காட்டி ஏதேனும் கேள்வி எழுப்பினால் நாம் பயந்து போய்விடுவோம் அல்லது என்ன சொல்வது என்றே தெரியாமல் வேறு ஏதாவது உளறி வைப்பவர்களும் உண்டு. ஆனால் அறிஞர் அண்ணாவோ இதுபோன்ற சவாலான கேள்விகளுக்கு அனைவரும் உறைந்துபோகும் அளவிற்கு பதில் அளிப்பதில் கை தேர்ந்தவர். அப்படி அவரின் பேச்சில் என்னதான் சிறப்பு இருக்கிறது என்று உங்களில் பலருக்கு வினா எழலாம் இதோ சொல்கிறேன்.
அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த காலம். அப்பொழுதுதான் ஹிந்திக்கு எதிராக பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் அரங்கேறிய சமயம் என்றுதான் சொல்லவேண்டும். ஒருவழியாக ஹிந்தி ஆட்சி மொழியாக ஏற்றுகொள்ள முடியாது என்று புறக்கணித்து அதைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்று இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அப்பொழுது நமது அறிஞர் அண்ணா அவர்கள் டில்லிக்கு (தற்போது புதுடெல்லி) ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தாராம். அனைவரும் பேசி முடித்தப் பிறகு அறிஞர் அண்ணாவை பேச அழைத்தார்களாம். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவான பல ஊடகங்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம். அப்பொழுது பேசத் தொடங்கிய அறிஞர் அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசுவதை விட எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எதுவும் மறுப்பு சொல்லாமல் அறிஞர் அண்ணாவும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார்.
அப்பொழுது அந்த பத்திரிக்கையாளர் ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாககூடாது என்று மறுக்கிறீர்கள்.?” என்று கேட்க அறிஞர் அண்ணாவோ ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாகவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?” என்று திருப்பி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பத்திரிக்கையாளரோ ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே..!? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி..?” என்றுக் கேட்டு இருக்கிறார். ஒருவேளை நம்மை போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஓடியே வந்திருப்போம். ஆனால் பேரறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியில் பதில் கொடுத்தாராம். ”நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”.
இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கைதட்டும்ஓசை நிற்க, பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நமது பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலின் மகிமையை. என்ன நண்பர்களே..! இன்றைய தகவல் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.
இன்னும் சிலர் பேசினால் அவர்களின் கேள்விகளுக்கு யாரும் எதிர்த்து பதில் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக ஆராய்ந்து பொருள்பட பேசுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் பிறர் தவறு என்று சொல்லி வாதிடும் வார்த்தைகளைக் கூட, தங்களின் பேச்சுத் திறமையால் தன் வசப்படுத்தி, மீண்டும் சரிதான் என்று சொன்னவர்களே உணரும் அளவிற்கு மிகவும் தெளிவான மதி நுட்பத்துடன் வாதிடும் திறமைப் படைத்தவர்கள் என்று சொல்லலாம். உதாரணமாக தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த வகையே என்று சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நம்மைப் போன்றவர்களிடம் அதிக கூட்டம் நிறைந்த இடத்தில் யாரேனும் ஒருவர் நமது தவறை சுட்டி காட்டி ஏதேனும் கேள்வி எழுப்பினால் நாம் பயந்து போய்விடுவோம் அல்லது என்ன சொல்வது என்றே தெரியாமல் வேறு ஏதாவது உளறி வைப்பவர்களும் உண்டு. ஆனால் அறிஞர் அண்ணாவோ இதுபோன்ற சவாலான கேள்விகளுக்கு அனைவரும் உறைந்துபோகும் அளவிற்கு பதில் அளிப்பதில் கை தேர்ந்தவர். அப்படி அவரின் பேச்சில் என்னதான் சிறப்பு இருக்கிறது என்று உங்களில் பலருக்கு வினா எழலாம் இதோ சொல்கிறேன்.
அப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த காலம். அப்பொழுதுதான் ஹிந்திக்கு எதிராக பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் அரங்கேறிய சமயம் என்றுதான் சொல்லவேண்டும். ஒருவழியாக ஹிந்தி ஆட்சி மொழியாக ஏற்றுகொள்ள முடியாது என்று புறக்கணித்து அதைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்று இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அப்பொழுது நமது அறிஞர் அண்ணா அவர்கள் டில்லிக்கு (தற்போது புதுடெல்லி) ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தாராம். அனைவரும் பேசி முடித்தப் பிறகு அறிஞர் அண்ணாவை பேச அழைத்தார்களாம். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவான பல ஊடகங்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம். அப்பொழுது பேசத் தொடங்கிய அறிஞர் அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசுவதை விட எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எதுவும் மறுப்பு சொல்லாமல் அறிஞர் அண்ணாவும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார்.
அப்பொழுது அந்த பத்திரிக்கையாளர் ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாககூடாது என்று மறுக்கிறீர்கள்.?” என்று கேட்க அறிஞர் அண்ணாவோ ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாகவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?” என்று திருப்பி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பத்திரிக்கையாளரோ ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே..!? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி..?” என்றுக் கேட்டு இருக்கிறார். ஒருவேளை நம்மை போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஓடியே வந்திருப்போம். ஆனால் பேரறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியில் பதில் கொடுத்தாராம். ”நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”.
இந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கைதட்டும்ஓசை நிற்க, பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நமது பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலின் மகிமையை. என்ன நண்பர்களே..! இன்றைய தகவல் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.
Friday, January 14, 2011
அகிலமெங்கும் பரந்து கிடக்கும் தமிழ் நெஞ்சங்களில் குதூகலம் பொங்கட்டும்!
புலம்பெயர்ந்து நாம் பொருள்தேடி அலைந்தாலும் மறக்காமல் மனம் நிறைய மகிழ்வுறும் இந்த நாளில் நமது சொந்த மண்ணை நினைக்காத நெஞ்சங்கள் எவருமுண்டோ!அதிகாலைப் பொழுதாக அனைவர் வாழ்வும் நலம் சிறக்க வாழ்த்துவது
புலம்பெயர்ந்து நாம் பொருள்தேடி அலைந்தாலும் மறக்காமல் மனம் நிறைய மகிழ்வுறும் இந்த நாளில் நமது சொந்த மண்ணை நினைக்காத நெஞ்சங்கள் எவருமுண்டோ!அதிகாலைப் பொழுதாக அனைவர் வாழ்வும் நலம் சிறக்க வாழ்த்துவது
உங்கள் வாழ்வில் இன்று போல் என்றும்
பொங்கட்டும் மகிழ்ச்சி உங்கள் வாழ்வில்
இது தமிழனின் திருவிழா தமிழுக்கு
பெருவிழ உங்கள் இல்லறம் நல்லறம்
ஆகட்டும் தமிழனின் வாழ்வில் பகுத்தறிவு
மலரட்டும் ஆம்ம் இது பகுத்தறிவு பொங்கல்
வாழ்த்துக்கள்
என்றும்
உங்களுடன்
இதயக்கனி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தைக்கின்ற முள்சொற்கள்
தமைப்பேசாத் தமிழினத்தார்
‘தை’க்கு அன்று அப்பெயரைத்
தந்ததென்ன காரணமோ?
வித்தை விதைப்பவர்க்கு
விளைச்சலையும் அனுபவிக்கும்
வித்தை தெரியவில்லை;
வியர்வையினால் பிறருக்குச்
சொத்தைப் பெருக்கித்தாம்
சொத்தையாய்ப் போவோர்க்கும்
இத்தைதான் கிழிந்திருக்கும்
இதயத்தைக் கொஞ்சம்
தைத்துத் தருவதனால்
தையென்று சொன்னாரோ?
காளைகளின் கொம்புகளைக்
காதலியர் கொங்கைகளாய்க்
காளையர்கள் எண்ணிக்
கைகளால் தழுவுகையில்
தைக்கின்ற புண்ணே
தாம் விரும்பும் குங்குமமாய்
வைக்கின்ற பெண்கள்தாம்
வைத்தாரோ இப்பெயரை
அத்தை மகளும், அவள்
அம்மான் மகனும், இனி
இத்தையில் மணம்புரிய
இனிய வழி பிறக்குமென்று
மெத்தைக் கனவுகள்
மெல்ல நெஞ்சைத் தைப்பதனால்
தத்தைத் தமிழிலிதைத்
தையென்று சொன்னாரோ?
மையலார் கண்ணால்
மணவாளன் இதயத்தைத்
தையலார் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
தையலர்க்கும் ஆடவர்க்கும்
தக்கபடி புத்தாடை
தையலர்கள் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
கைதனில் கரும்பெடுத்துக்
களிக்கின்ற சிறுவர்கள்
தைதையென ஆடுவதால்
தையென்று சொன்னாரோ?
சாதிப் பகையால்
சமயப் பிணக்குகளால்
வீதிக் கலவரத்தால்
வெறிபிடித்த கட்சிகளின்
மோதல்களால் தங்கள்
முகவரியை −ழந்துவரும்
ஆதித் தமிழர்
அனைவரையும் ஒன்றிணைத்து
அன்பாலே தைக்கின்ற
அந்நாளே தையென்போம்
இன்பநாள் காண்போம்
இணைந்து.
இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்……
Wednesday, January 12, 2011
நெஞ்சமெல்லாம் நீயே....
ஊரெல்லாம் உறங்க
உனக்கும் எனக்குமான
தனிமை...
மௌனமொழி யுத்தம்
இருவருக்குமிடையில்
தனிமை கொடுமையானதென்று
தத்துவம் பேசமுடியாது!
உன் ஆழ்மனதின் அன்பை என்னால்
மட்டுமே உணரமுடியும்...
இருளின் அமைதியில்
உனக்கும் எனக்குமான நெருக்கம்
காற்றலைகளினால் கைப்பேசி
உதவியுடன் காதருகில்!
நெஞ்சமெல்லாம் நீயே...
நமக்கான காதல் நினைவுகளை
நம் சந்ததியினரிடம் சொல்ல - இந்த
வான்மதியும் விடிவெள்ளியும்
காத்திருக்கின்றன!
என் விழிகள் சிவந்திருந்தாலும்
இதழ்களோ செம்மையாய் - உன்
முத்தச் சுவை மாறாமல்...
எந்தத் தேசத்தில் நீ இருந்தாலும்
என் நேசம் மட்டும் மாறாது
எனை ஆளும் தேசமும் நீதானே...
கூண்டுக் கிளியாய் தனித்திருந்தாலும்
உன் காதல் வரிகளின் தனிமையில்
தவநிலை மாறாமல்...நெஞ்சமெல்லாம் நீயே...
உனக்கும் எனக்குமான
தனிமை...
மௌனமொழி யுத்தம்
இருவருக்குமிடையில்
தனிமை கொடுமையானதென்று
தத்துவம் பேசமுடியாது!
உன் ஆழ்மனதின் அன்பை என்னால்
மட்டுமே உணரமுடியும்...
இருளின் அமைதியில்
உனக்கும் எனக்குமான நெருக்கம்
காற்றலைகளினால் கைப்பேசி
உதவியுடன் காதருகில்!
நெஞ்சமெல்லாம் நீயே...
நமக்கான காதல் நினைவுகளை
நம் சந்ததியினரிடம் சொல்ல - இந்த
வான்மதியும் விடிவெள்ளியும்
காத்திருக்கின்றன!
என் விழிகள் சிவந்திருந்தாலும்
இதழ்களோ செம்மையாய் - உன்
முத்தச் சுவை மாறாமல்...
எந்தத் தேசத்தில் நீ இருந்தாலும்
என் நேசம் மட்டும் மாறாது
எனை ஆளும் தேசமும் நீதானே...
கூண்டுக் கிளியாய் தனித்திருந்தாலும்
உன் காதல் வரிகளின் தனிமையில்
தவநிலை மாறாமல்...நெஞ்சமெல்லாம் நீயே...
Monday, January 10, 2011
கலைஞரின் குறளோவியம்
கலைஞரின் குறளோவியம்
வீதியில் பசு ஒன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக் குட்டி தாயைச் சுற்றி சுற்றி ஓடியும், தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்த கன்று தொலைவில் போய்விடக் கூடாது என்பதிலே தாய்ப் பசு கண்ணும் கருத்துமாய் இருந்தது, கன்றுக்குட்டி மான் போல துள்ளி வீதிக்கு நடுவே ஓடும், பசுவோ அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போல பயமுறுத்தும், தாயின் கோபத்தைப் புரிந்து கொண்ட இளங்கன்று உடனே அதன் அருகே துள்ளி வரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.
அந்த வீதியில் ஒரு கரும்பன்றி மலம் தின்ற வாயுடன் உறுமிக்கொண்டே கன்றுக் குட்டியிடம் வந்து உரசிடத் தொடங்கியது, கன்று தனக்கு ஒரு இணை கிடைத்து விட்டதாக எண்ணி அந்தப் பன்றியுடன் வீதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. பசுவுக்கு பொல்லாச்சினம் பொங்கி விட்டது. கன்றுக் குட்டியை ஆத்திரத்துடன் நோக்கி அதனைத் தன்னருகே வருமாறு கத்திக் காட்டியது. கன்று பன்றியிடமிருந்து விடுபட்டு வர முயற்சித்த போதிலும் அதைப் பன்றி விடாமல் துரத்தித் தன் மீது படிந்துள்ள சகதியைக் கன்றின் உடலில் ஒட்ட வைத்தது. தாய்ப் பசுவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை. கொம்புகளை நீட்டியவாறு பன்றியின் மீது பாய்ந்தது. பசுவின் வேகத்தைக் கண்ட பன்றி பயங்கரமாக ஒலி எழுப்பிக் கொண்டு அந்த வீதியிலே நெடுந்தொலைவு ஓடி, இறுதியாக அங்கிருந்த சின்னஞ்சிறு கழிவு நீர்க் குட்டைக்குள்ளே குதித்தது. அந்த குட்டைக்குள் ஏற்கனவே பத்துப் பதினைந்து பன்றிகள் புழுக்கள் நெளியும் அக்குட்டையில் ஊறிக்கொண்டிருந்தன !!!. தமது இனத்தைச் சேர்ந்த மற்றொரு பன்றி வந்ததும் எல்லாமே அதனைச் சூழ்ந்து கொண்டு கட்டிப் புரண்டு களிப்புக் கொண்டாடின.
இந்தக் காட்சி அனைத்தையும் கண்ட வள்ளுவர், சிற்றினம் சிற்றினத்தைத்தான் சேரும் என்பதற்காக அவர் தொடுத்த குறள் இதோ.....
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
அதிகாரம்- 46 சிற்றினம் சேராமை பாடல்- 451
"சிற்றினத்திற்கு அஞ்சி அதனை ஒதுக்குவது உயர்ந்தோரின் இயல்பு! அந்தச் சிற்றினத்தை சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்ளுதல் இழிந்தோரின் இயல்பு."
[சிற்றினம் - கீழோர் சேர்க்கை; இழிந்தோர் - தாழ்ந்தோர்
Sunday, January 9, 2011
இனியவை நாற்பது
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே;
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பூதஞ் சேந்தனார்இயற்றிய இனியவை நாற்பது
நல் சபையில் கைக்கொடுத்தல் சாலவும் முன் இனிதே;
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது; ஆங்கு இனிதே,
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
பூதஞ் சேந்தனார்இயற்றிய இனியவை நாற்பது
Saturday, January 8, 2011
வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்
தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.
பொருளடக்கம்
1 வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
a)அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
b) எ என்னும் வினா எழுத்தின் பின்
c) அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
d) அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
e)அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
2 வல்லெழுத்து மிகா இடங்கள்
a) அது, இது, எது என்னும் சொற்களின் பின்
b) ஏது, யாது என்னும் சொற்களின் பின்
c) அவை, எவை, இவை, யாவை
d) அத்தனை, எத்தனை, இத்தனை
e) அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
f) அன்று, என்று, இன்று
வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்
அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
அ + காலம் = அக்காலம்
இ + சமயம் = இச்சமயம்
உ + பக்கம் = உப்பக்கம்
எ என்னும் வினா எழுத்தின் பின்
எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை சேய்மைச் சுட்டு மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
அந்த + காலம் = அந்தக் காலம்
இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்
எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
அங்கு + செல் = அங்குச் செல்
எங்கு + கற்றாய் = எங்குக் கற்றாய்
இங்கு + பார் = இங்குப் பார்
வல்லெழுத்து மிகா இடங்கள்
அது, இது, எது என்னும் சொற்களின் பின்
அது காண்
எது செய்தாய்
இது பார்
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
ஏது கண்டாய்
யாது பொருள்
அவை, எவை, இவை, யாவை
அவை பெரியன
யாவை போயின
அத்தனை, எத்தனை, இத்தனை
அத்தனை செடி
எத்தனை பசு
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு
அன்று, என்று, இன்று
அன்று சொன்னான்
என்று தந்தான்
இன்று கண்டான்
கர்மவீரர் காமராஜர்
கர்மவீரர் காமராஜர்
தன்னலம் கருதா,
தனக்கென வாழா,
தன்மானத் தலைவரே!!
விருதுநகர் பட்டிலே,
அன்னை சிவகாமி அம்மையாருக்கும்,
குமாரசாமி அவருக்கும் பிறந்த
மாபெரும் ஜோதியே!!
காந்தியின் வழி வந்த கர்மவீரரே!
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் சீடரே!
உலகத் தலைவர்கள் வியந்து
பாராட்டிய பாரதத் தலைவரே!
உனது புகழை;
உனது தியாகத்தைச் சொல்ல
எனக்குத் தகுதி ஏது??
இந்திய நாட்டில் தமிழ் நாடு
தந்த தவப்புதல்வனே !
இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்று சித்திரவதையடைந்து
சுதந்திரம் பெற்றுத் தந்த
பெரும் தியாகியே! - ஏழைப் பங்காளனே!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரர் காமராஜரே!
தமிழ் நாட்டின் முதலைமச்சராக பொறுப்பேற்று
பல அரிய சாதனை செய்து
புகழ் பெற்றவரே!
கல்விக்கே கண் திறந்த கருணைக் கடலே!.
ஏழை மாணவர்களுக்கே
முதன் முதலாய் மதிய உணவு தந்த
மாபெரும் தலைவரே!
குலக் கல்வித் திட்டத்தை
ஒழித்த கோமகனே!
பட்டி தொட்டி வாழ்ந்த
பாமரமக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும்
ஏழைப்பங்காளனாய் வாழ்ந்த ஏகலைவனே!
உனது ஆட்சியில்
யாரும் செய்யாததையும், இனி
யாரும் செய்ய முடியாததையும்
செய்து காண்பித்த செம்மலே!
கறை படியாத காரூண்ணியரே!
பதவி வெறிபிடித்து அலையும்
தலைவர்களைப் போலில்லாமல்;
பதவியே வேண்டாமென தூக்கி எறிந்தவரே!
உனது தியாகத்தை என்னவென்று சொல்வேன்!
சொல்லின் செல்வமே!
பண வெறிபிடித்து அலையும் பித்தர்கள் மத்தியில்
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை
மூவையும் வெறுத்த முத்தமிழே.....
உனது நாமம் என்றும் வாழ்க!! வாழ்க!!
தனக்கென வாழா,
தன்மானத் தலைவரே!!
விருதுநகர் பட்டிலே,
அன்னை சிவகாமி அம்மையாருக்கும்,
குமாரசாமி அவருக்கும் பிறந்த
மாபெரும் ஜோதியே!!
காந்தியின் வழி வந்த கர்மவீரரே!
தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் சீடரே!
உலகத் தலைவர்கள் வியந்து
பாராட்டிய பாரதத் தலைவரே!
உனது புகழை;
உனது தியாகத்தைச் சொல்ல
எனக்குத் தகுதி ஏது??
இந்திய நாட்டில் தமிழ் நாடு
தந்த தவப்புதல்வனே !
இந்திய நாட்டின் விடுதலைக்காகச்
சிறை சென்று சித்திரவதையடைந்து
சுதந்திரம் பெற்றுத் தந்த
பெரும் தியாகியே! - ஏழைப் பங்காளனே!
கல்விக்கு வித்திட்ட கர்மவீரர் காமராஜரே!
தமிழ் நாட்டின் முதலைமச்சராக பொறுப்பேற்று
பல அரிய சாதனை செய்து
புகழ் பெற்றவரே!
கல்விக்கே கண் திறந்த கருணைக் கடலே!.
ஏழை மாணவர்களுக்கே
முதன் முதலாய் மதிய உணவு தந்த
மாபெரும் தலைவரே!
குலக் கல்வித் திட்டத்தை
ஒழித்த கோமகனே!
பட்டி தொட்டி வாழ்ந்த
பாமரமக்களுக்கும், ஏழை விவசாயிகளுக்கும்
ஏழைப்பங்காளனாய் வாழ்ந்த ஏகலைவனே!
உனது ஆட்சியில்
யாரும் செய்யாததையும், இனி
யாரும் செய்ய முடியாததையும்
செய்து காண்பித்த செம்மலே!
கறை படியாத காரூண்ணியரே!
பதவி வெறிபிடித்து அலையும்
தலைவர்களைப் போலில்லாமல்;
பதவியே வேண்டாமென தூக்கி எறிந்தவரே!
உனது தியாகத்தை என்னவென்று சொல்வேன்!
சொல்லின் செல்வமே!
பண வெறிபிடித்து அலையும் பித்தர்கள் மத்தியில்
பொன்னாசை, பெண்ணாசை, மண்ணாசை
மூவையும் வெறுத்த முத்தமிழே.....
உனது நாமம் என்றும் வாழ்க!! வாழ்க!!
Friday, January 7, 2011
அப்புறம்...
இருள் சூழ்ந்த நேரம்
இணைய முடியா தருணம்
இயலாமையில் இருவரும்...
கை பேசி ஒன்றே கண்கண்ட தெய்வம்!
காற்றலைகள் மட்டுமே தூது போகும்
செல்ல குழந்தைகள்!
சிரித்துப் பேசி சித்திரமாய்
எண்ணற்ற கதைகள் சொல்வாய்!
பேசி முடித்து இணைப்பைத் துண்டிக்க
முயலும் போது அப்புறம் என்று
ஆரம்பித்து அடுத்த கதை ஆரம்பிப்பாய்...
பிரிவின் துயரத்தை இருவரும் ஏற்பதில்லை
அதுதான் நிதர்சனம் என்பதை
இருவரும் மறுப்பதில்லை
நொடித் துளிகள் நொடிந்து
நிமிடத் துளிகள் நிறைந்து
மணித் துளிகளாக மாறும் - நம்
நிலையிலிருந்து நாமும் மாறமாட்டோம்....
வீதியுலா வரும் நிலவும் நின்று பார்க்கும்...
கூர்க்காவும் விசிலடித்து செல்வான்
நடுநிசியில் ஊரே உறக்கத்தின் பிடியில்
நாமோ காதலின் பிடியில்...
விடியல் பொழுதின்
கடமைகள் கண்ணை உறுத்தும்
ஒரு வழியாய் துயிலலாம்
என்று எத்தனித்து
பேச்சை முடிக்கும் நேரம்
ஏதோ ஒன்றை நான் கேட்டுத் தொலைய
சட்டென்று ஒற்றை வார்த்தையில்
இதயம் சுடுவாய்!!
கத்தியின்றி குத்திய வார்த்தையில்
செத்துப் பிழைப்பேன்...
கனத்த மனதுடன் கலங்கிய விழிகளுடன் - என்
துப்பட்டாவினால் முகம் மறைத்து
விம்முவேன்....
உன் மௌனம் நான் காயப்பட்டிருப்பதை
நீ உணர்ந்ததாக எனக்கு உணர்த்தும்...
காயம் பட்டவள் கண்ணுறங்கி விடுவேன்!
விடிந்ததும் கைபேசி பார்க்கையில்
உன் வருத்தம், மன்னிப்பு குறுஞ்செய்திகள்
நிறைந்து கிடக்கும்!
உதறலோடு உனை அழைப்பேன்...
ஒற்றை சத்தத்திலேயே
அடியே! கோபமா? - எனக்கு
பேசத் தெரியலை...
வாஞ்சையாய் வருத்தம் தெரிவிப்பாய்!
எனக்கோ சுட்ட வார்த்தைகள்
பட்டுப் போய் பறந்து விடும்!
ஓடிவந்து உனை கட்டிக் கொள்ள உள்ளம் துடிக்கும்...
இதமாய் 'இல்லைம்மா' என்பேன் காதலாய்...!
அப்புறம்.... என்று நீ...
நொடிகள், நிமிடமாகி, மணித்துளிகளாகி.....
Thursday, January 6, 2011
Wednesday, January 5, 2011
Tuesday, January 4, 2011
Monday, January 3, 2011
Sunday, January 2, 2011
நட்பு கவிதைகள்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு
உயிரோடு இருந்தால் வருகிறேன் ! - இது காதல்
கஷ்டம் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரை கொடுக்க வருகிறேன் !
இதுதான் என் நட்பு .......
ஏன் பிறந்தோம் என்று நினைப்பவர்கள் கூட
உங்கள் நட்பு கிடைத்தால் ஆயிரம் முறை பிறக்கலாம்
என்று நினைப்பார்கள்!
பிறக்கும் போது நான் எதையும் கொண்டு வரவில்லை !
ஆனால்
நான் இறக்கும் போது கொண்டு செல்வேன்..
உங்கள் பாசமான நட்பின் நினைவுகளை .....
என்றும் நட்புடன்................. நட்பு
Subscribe to:
Posts (Atom)