Wednesday, January 12, 2011

நெஞ்சமெல்லாம் நீயே....

ஊரெல்லாம் உறங்க
உனக்கும் எனக்குமான
தனிமை...

மௌனமொழி யுத்தம்
இருவருக்குமிடையில்
தனிமை கொடுமையானதென்று
தத்துவம் பேசமுடியாது!

உன் ஆழ்மனதின் அன்பை என்னால்
மட்டுமே உணரமுடியும்...
இருளின் அமைதியில்
உனக்கும் எனக்குமான நெருக்கம்

காற்றலைகளினால் கைப்பேசி
உதவியுடன் காதருகில்!
நெஞ்சமெல்லாம் நீயே...

நமக்கான காதல் நினைவுகளை
நம் சந்ததியினரிடம் சொல்ல - இந்த
வான்மதியும் விடிவெள்ளியும்
காத்திருக்கின்றன!

என் விழிகள் சிவந்திருந்தாலும்
இதழ்களோ செம்மையாய் - உன்
முத்தச் சுவை மாறாமல்...

எந்தத் தேசத்தில் நீ இருந்தாலும்
என் நேசம் மட்டும் மாறாது
எனை ஆளும் தேசமும் நீதானே...

கூண்டுக் கிளியாய் தனித்திருந்தாலும்
உன் காதல் வரிகளின் தனிமையில்
தவநிலை மாறாமல்...நெஞ்சமெல்லாம் நீயே...


No comments:

Post a Comment