Thursday, January 6, 2011

இன்றைய பெண்!


 
Join Only-for-tamil
சென்ற நூற்றாண்டோடு,
கள்ளிச் செடிகள் அனைத்தும்
களை எடுக்கப்பட்டன....
நெல்லுமணி அனைத்தும்
நொறுங்கிப் போய் அரிசியாகின....
எருக்கங் கீற்றெல்லாம்
எரிந்துபோயிற்று....

இளைப்பாற இடமற்ற
இவ்வுலகில் விஞ்ஞானத்தோடு
சேர்ந்து மிளிரும் அஞ்ஞானம்
இன்றைய பெண்!

பிரம்மன் எழுதிய அடிமைச்சாசனம்
இந்த நூற்றாண்டோடு
கிழிந்து போனது...

அநியாயச் சூட்டால்
இரத்தம் கொதிக்கும் ,
நரம்புகள் புடைக்கும் ,
ஆண்களின் வீரம்
கைமாறிப்போனது.....

பூமியில் பூத்த பல
பாதரசக் குமிழ்கள்
புத்துயிர் பெற்றுப் பிரகாசிக்கின்றன,
விண்மீன்களோடு சில பெண்மீன்களாய் !

வளரும் இந்தியாவில்
அதீத வளர்ச்சியாய் பல
இந்தியாக்கள் எதிர்நீச்சல் போடுகின்றன ,
சில ஆண்களோடு.....

இந்த அவசர உலகில்
ஆண்களின் அவசிய வேண்டுகோள்,
மறுபிறப்பில் பெண்ணாக
அவதரிக்கவேண்டும் இறைவா... என்று!

அடிமை நாட்கள் எல்லாம்
தனிமைப் படுத்தப்பட்டு ,
தலைஎழுத்துக்கள்  அனைத்தும்
விதியை மாற்றக் காற்றோடு
விரைகின்றன....

வரவேற்போம்! வாழ்வளிப்போம் !
வாழ்வோம்!

No comments:

Post a Comment