Monday, December 5, 2011

ஐயப்பா நீ பொய்யாப்பா!!!!!!!!!!!!!!!

பம்பை நதி பாலகனே
மாசில்லா மனிகண்டனே
சபரிமலை வாசனே
ஐயம் தீர்க்கும் ஐயப்பனே ......
சபரி மலைலேயே குடி இருக்கும்
ஐயப்பனே உனக்கு அவர்களின்
ஐயம் தீர்க்க சக்தில்லையோ .....
இல்லை நாடிவருபவர்களை
ஏமாற்றுவதில் வல்லவனோ நீ ......
முல்லைப் பெரியாற்றின்
சிக்கலை சீர்செய்ய முடியாதவனா
நீ ....
உனக்கு இருமுடி எதற்கு ....
உன்னைப் பெற்ற பரமசிவனும்
பார்வையற்றுப் போனானோ ........
இல்லை அவனும் பலனற்று போனானோ ????
தமிழனுக்கு நீர் வழங்குவதற்கு .....
-----முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Monday, October 24, 2011

தற்போதைய செய்திகள்உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் விவரம் 2011

சென்னை, அக்.24: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் பெற்ற மொத்த வாக்குகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்:
அதிமுக - 2,22,42,131 (74.6%)
திமுக - 36,39,625 (12.2%)
தேமுதிக - 6,22,537 (2.1%)
காங்கிரஸ் - 4,88,342 (1.6%)
பாமக - 3,73,327 (1.3%)
பிஜேபி - 2,03,976 ( 0.7%)
மதிமுக - 1,62,992 (0.5%)
சுயேட்சைகள் - 18,06,407 (6.1%)

Sunday, October 2, 2011

பெண்களெல்லாம் பெரியோரில்லையா?

“பெரியோர்களே, தாய்மார்களே...!’’



- இப்படித்தான் ஆகப் பெரும்பாலான பொதுக் கூட்டங்களில், கருத்தரங்குகளில் தலைவர்களும் மற்ற பேச்சாளர்களும் தங்களது பேச்சைத் தொடங்குகிறார்கள்.



குறிப்பிட்ட பேச்சில், தாங்கள் வலியுறுத்தும் கருத்தில் அவர்களில் எத்தனை பேர் உண்மையான விசுவாசத்துடன் இருக்கிறார்கள், எத்தனை பேர் வெறும் கைதட்டல் மோகத்துடன் பேசுகிறார்கள் என்பது மக்கள் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய மர்மம். இங்கே நாம் விவாதிக்க எடுத்துக் கொள்வது அந்த “பெரியோர்களே தாய்மார்களே’’ என்ற தொடக்க விளிப்புச் சொற்களைப் பற்றிதான்.

தங்களது அனுபவ முதிர்ச்சியால் வழிகாட்டுகிற பெரியோர்களையும், அன்றாடம் வயிற்றில் சிசு, இடுப்பில் தண்ணீர்க்குடம், தோளில் குடும்பம், மனதில் துயரம் என சுமந்து கொண்டே இருக்கிற தாய்மார்களையும் விளித்து, வணங்கி பேச்சைத் தொடங்குவது நல்ல நாகரீகம்தான்.



ஆனால், கேள்வி ‘அப்படியானால் தாய்மார்க ளெல்லாம் பெரியோர்கள் இல்லையா’ என்பதுதான்.



ஆண்களை மட்டுமே “பெரியோர்களே’’ என்ற மரியாதைக்கு உரியவர்களாக முன்னிலைப்படுத்துகிற ஆணாதிக்கச் சிந்தனையின் தாக்கம் இதில் வெளிப்பட வில்லையா? உரையாற்றுகிற அந்த மனிதர் ஆணாதிக்கத்தை எதிர்ப்பவராக, பெண்ணுரிமைக்கு உணர்வுப்பூர்வமாய்க் குரல் கொடுப்பவராகவே கூட இருக்கலாம். ஆனால் அவரையுமறியாமல், சிறு வயதிலிருந்தே கேட்டும் பேசியும் வந்த பழக்கத்தின் காரணமாக இவ்வாறுதான் தமது பேச்சைத் தொடங்குகிறார். இவ்வாறு தாய்மார்களை இரண்டாம் இடத்திற்குத் தள்ளியது - பொதுமை சார்ந்த தாய் வழிச் சமூக அமைப்பை உடைமை சார்ந்த தந்தை வழிச் சமூக அமைப்பு ஒடுக்கியதன் ஒரு வெளிப்படையான ‘மொழி அடையாளம்’ எனலாம்.



சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு சிறிய அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நான் பேச அழைக்கப்பட்டேன். சற்று வித்தியாசமாகப் பேச்சைத் தொடங்க எண்ணியவனாக, “நண்பர்களே, சகோதரிகளே’’ என்று விளித்துப் பேசி முடித்தேன். கூட்டம் முடிந்து கலைகிறபோது என்னிடம் வந்த பெண் சிரித்துக்கொண்டே கேட்டாள்: “அதென்ன நண்பர்களே, சகோதரிகளே என்று ஆரம்பித்தீர்கள்? அப்படியானால் நாங்களெல்லாம் உங்களுக்கு நண்பர்கள் இல்லையா?”



சிரித்துக்கொண்டே விடைபெற்றேன் என்றாலும் என் மனதில் ஒரு ஆழமான உறுத்தலையும், மாற்றத்திற்கான ஒரு தொடக்கத்தையும் விளைவித்த கேள்வி அது. அதன் பிறகு இன்றுவரை எந்த நிகழ்ச்சியானாலும், “தோழர்களே” என்றோ, “நண்பர்களே” என்றோதான் தொடங்குகிறேன். இருபாலர் மட்டுமல்ல, மூன்றாம் பாலினத்தவர் அக்கூட்டத்தில் இருப்பின் அவர்களுக்கும் இந்த விளிப்பு பொருந்தும்.



தாய்மொழி மீதான உணர்ச்சி வசப்படுதலுக்கு இடமளிக்காமல் சிந்தித்துப் பார்த்தால், மொழிகூட இப்படி பெண்ணுக்கு எதிராகவே இருக்கிறது அல்லது அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும். “ஆண் - பெண் சமத்துவம்” என்று பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் கூட ஆணை முதன்மைப்படுத்தி விடுகிறோம். “ஆண்-பெண் வேறுபாடில்லாமல் பழக வேண்டும்” என ஒரு உன்னதத் தோழமையை வலியுறுத்திப் பேசுகிறபோது கூட அங்கே ஆண்தான் முன்னால் வந்து நிற்கிறான்.



“செல்வன்” என்றழைக்கப்படும் குழந்தைப் பருவத்தைத் தாண்டிவிட்டால் ஆணுக்கு நிரந்தரமாக “திரு” பட்டம் கிடைத்துவிடுகிறது. பெண்ணுக்கோ முதலில் “செல்வி” அப்புறம் “குமாரி” அதற்கப்புறம் - அதுவும் திருமண உறவு ஏற்பட்டால் மட்டுமே - “திருமதி” என்று அடையாளம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆங்கில மொழியில், பெண்ணுரிமை இயக்கங்களின் தொடர் போராட்டத்திற்கு ஒரு வெற்றியாக ‘மிஸ்’ ‘மிஸஸ்’ என்ற சொற்களுக்குப் பதிலாக “ம்(மி)ஸ்’’ என்ற உச்சரிப்பு வரும் வகையில் ‘எம்எஸ்’ என்று குறிப்பிடும் பழக்கம் வந்துவிட்டது. தமிழில்? “திருமிகு” என்ற சொல் பொருத்தமானது. சிலரே அதை இருபாலருக்கும் பயன்படுத்துகிறார்கள். எப்போது அது பரவலாகப் பொதுப்பயன்பாட்டிற்கு வரும்?



“மனிதன்” என்று குறிப்பிடும்போதும் ஆண் தன்மை மேலோங்கியிருக்கும் உணர்வுதான் ஏற்படுகிறது. “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்ததுபோல” என்று நையாண்டியாக உவமை காட்டும்போதும் “பட்டிக்காட்டான்’’ பற்றிக் கூறி, பட்டிக்காட்டுப் பெண்ணை மறந்து விடுகிறோம். நையாண்டியில் கூட விலக்கப்பட்டவள் பெண்! “தொழிலாளி வெகுண்டெழுந்தால் அவன் முன் சுரண்டல் கூட்டம் நிற்க முடியாது” என்று உழைக்கும் மக்களின் எழுச்சியை சொல்லும்போதும் தொழிலாளியை ஆணாகவே வரித்துக் கொள்கிறோம். “ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்’’ என்று முழங்குகிறபோது, நம்மையறியாமல் ஏழைக்கும் அடிமைக்கும் கீழாகப் பெண்ணைத் தள்ளிவிடுகிறோம்.



“வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ?” -புகழ்பெற்ற இந்தப் பாடல் ஒரு ஆழ்ந்த தத்துவ விசாரணையில் இறங்குகிறது. ஆனால் மனைவி, பிள்ளை, உறவு என்று அடுக்குகிறபோது ஆணுக்கான துணைகள் பற்றிய கவலையாகத்தானே அது வெளிப்படுகிறது?” “நல்ல மனைவி, நல்ல பிள்ளை, நல்ல குடும்பம் தெய்வீகம்” என்ற மற்றொரு பிரபலமான பாடலும் ஆணுக்கு நல்ல மனைவியும் பிள்ளையும் குடும்பமும் அமைவது பற்றித்தான் அக்கறை கொள்கிறது.



பகுத்தறிவுச் சிந்தனைகளை முழுமனதோடு ஏற்று வாழ்பவர்கள் கூட இப்படிப்பட்ட சொல்லாட்சிகளிலிருந்து தப்பிவிட முடிவதில்லை. புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறவர்கள்கூட பேச்சுவாக்கில், “.... இதனால் இன்று எனக்கு பயனில்லாமல் போகலாம். ஆனால் நாளை என் மகன் பயனடைவான். என் பேரன் பயன்பெறுவான்” என்கிறார்கள். உணர்ந்து செய்யவில்லை என்றாலும்கூட, மகளையும் பேத்தியையும் அவர்கள் மறந்துவிடுவது அவர்கள் அறியாமலே சமுதாயத் திணிப்பின் எச்சம் அவர்களோடு ஒட்டியிருப்பதால்தான்.



மொழி எந்த அளவுக்குப் பெண்ணின் எதிரியாக்கப் பட்டிருக்கிறது என்பதற்கு, தெருச் சண்டைகளின்போது வீசப்படும் “கெட்ட வார்த்தைகள்” சரியான ஆதாரம். குறிப்பாகத் தமிழில் உள்ள அத்தகைய சொற்கள் ஆணின் தாயை, சகோதரியை, மனைவியை இழிவுபடுத்தி அதன் மூலம் உசுப்பேற்றுவதாகவே கையாளப்படுகின்றன.



சண்டை என்று வந்தால்தான் என்றில்லை. சாதாரண முறையில் “ஜாலியாக” பேசிக்கொண்டிருக்கும்போது கூட இந்தச் சொற்கள் சர்வசாதாரணமாகப் புழங்குகின்றன. இவ்வளவு ஏன், யாரையாவது எதற்காகவாவது பாராட்டுகிறபோது கூட அவரது தாய் அல்லது சகோதரியுடன் பாலியல் உறவு கொண்டவராக சித்தரிக்கும் சொற்களைப் பொழிந்து புளங்காகிதம் அடைகிறவர்கள் உண்டு.



தாய்மொழியை தாயாகவே கொண்டாடுகிற மண்ணில்தான் இந்த வக்கிரங்கள் “தமிழைப் பழித்தவனை (இங்கே கூட ஆண்!) தாய் தடுத்தாலும் விடேன்” என்ற வீரமிகு கர்ச்சனைகள், மொழி பழிக்கப்படுவது பற்றிச் சீற்றம் கொள்கிற அளவுக்கு தாய் பழிக்கப்படுவது பற்றிக் கண்டுகொள்வதில்லை.



குடும்பப் பொருளாதார நிலைமை காரணமாகவோ, சமூக விரோத சுயநலமிகளின் மிரட்டல் காரணமாகவோ, அறியா வயதில் கடத்திச் செல்லப்பட்டதன் காரணமாகவோ பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுக்குத்தான் இங்கே “விபச்சாரி” என்ற பெயர். அவர்களைத்தான் “அழகிகள் கைது” என்று வர்ணித்து சில நாளேடுகளில் செய்தி வரும். சில ஆண்களும் சதை வியாபாரத்தில் ஈடுபடுவதாக அவ்வப்போது பரபரப்புக் கட்டுரைகள் வெளியிடப்பட்டாலும், அவர்களுக்கு “விபச்சாரன்’’ அல்லது “அழகன்’’ என்ற தொழிற்பெயர்கள் கிடையாது.



மொழியில் ஆணை முதன்மைப்படுத்திய ஆதிக்கத்தின் உச்சமாகத்தான், மனிதர்கள் கடவுளைப் படைத்தபோது ஆணாகவே வார்த்தனர் போலும். எந்த மதத்திலும் கடவுள் ஆண்பால்தான். பெண் தெய்வங்கள் உண்டென்ற போதிலும், அப்படி “பெண்-தெய்வங்கள்” என்று பிரித்துக் காட்டினால்தான் உண்டு. மற்றபடி தெய்வம், இறைவன், ஆண்டவன் என்ற பொதுச் சொற்களெல்லாம் கடவுளை “எக்ஸ்-ஒய்.” என்றே உருவகிக்கின்றன. (எக்ஸ்-ஒய். என்பது உயிர் வேதியலில் ஆண் உயிரணுக்களுக்கான குறியீட்டு எழுத்தாகும்). நம் வள்ளுவர் கூட “ஆதிபகவன்,” “மலர்மிசை ஏகினான்,” “கெடுக உலகியவற்றியான்” என்றெல்லாம் கடவுளை ஆணாகக் கூறுவதிலிருந்து விலக முடியாதவராகத்தானே இருந்திருக்கிறார்!



இவ்வாறு மொழியும் சொற்களும் ஆணின் அடக்குமுறைக் கருவிகளாய், பெண்ணை ஒடுக்கும் ஆயுதங்களாய் மாற்றப்பட்டது குறித்து ஆய்வு செய்தால் முனைவர் பட்டம் பெறுகிற அளவுக்கு வரலாற்றுத் தகவல்கள் ஏராளமாகக் கிடைக்கும். பாலின சமத்துவத்தைச் செதுக்கி நிலைநாட்டுகிற பேரியக்கத்திற்கு அத்தகைய ஆய்வும் உதவக்கூடும்.

Sunday, August 14, 2011

தமிழன் இந்த சுதந்திரத்தை கொண்டாடலாமா ?????????????????

நீங்கள் தமிழர் தானே இந்திய மண்ணில் உள்ள தமிழகத்தை சார்ந்தவர்கள் தானே நாம் ... நம்மக்கு என்ன சுதந்திரம் கிடைத்தது என்று எண்ணுகிறீர்கள் ......நான் வினவும் விடைகளுக்கு உங்களிடம் விடை இருந்தால் தாருங்கள் நானும் ஏற்றுக் கொள்கிறேன் தமிழனும் இந்தியாவின் சுதந்திரத்தை கொண்டாடலாம்
கேள்வி 1:- தமிழகம் இந்தியாவில் தானே உள்ளது.அப்படி இருக்கும் பட்சத்தில் நமக்கு காவேரி நீர் கிடைக்கிறதா..
கேள்வி 2 :- முல்லைப் பெரியார் அணையிலிருந்து நமக்கு நீர் கிடைக்கிறதா .....
கேள்வி 3 :- கிருஷ்ணா நதிநீர் பிரச்சனை தீர்ந்து விட்டதா....
கேள்வி 4:- ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்களின் வலையை கிழித்து நாசம் செய்வதிலிருந்து விடுப்பட்டுவிட்டோமா ......
கேள்வி 5:-ராமேஸ்வரம், நாகை, கன்னியாகுமரி ,வேதாரணியம் அதிராம்பட்டினம் ஆகிய ஊர்கள் தமிழகத்தில் இல்லையா ??????????? அப்படி இருந்தால் அவர்கள் தமிழர்கள் இல்லையா???? அப்படி இருந்தால் அவர்கள் இந்தியர்கள் இல்லையா???? அவர்கள் மீன்பிடி தொழில் செய்வது தவறா???? அவ்வாறு மீன்பிடிக்கும் பொது பரதேசி சிங்களன் அவர்களை கொள்வதும் மீன்களைப் பிடுங்கி வலையை கிழிப்பதை கேட்க கூடாதா மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கம் இதுக்கே பதில் கூறுங்கள் போதும் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று மார்த் தட்டி கூருகிறேன் நானும் இந்தியன் நானும் சுதந்திரம் அடைந்து விட்டேன் என்று உரக்க கூறுகிறேன்
வெள்ளக்காரன் நம் நாட்டை விட்டு போய்
அறுவத்தி ஐந்து வருஷம் ஆச்சே
வருமைய ஒளிசிருக்கன்களா
இந்த அறுவத்தி ஐந்து வருசத்துல
காங்கிரெஸ் காரன் ஐம்பத்தி ஆறு
வருஷம் இந்த நாட்டை ஆண்டுஇருக்கான்
ஆனாலும் இன்னும் வறுமை ஒழியல
மீனவர் பிரச்னை தீரல காவேரி பிரச்சனை
தீரல மக்கள் வறுமை ஒழியல
இதுக்கெல்லாம் யாரு காரணம்
இந்த காங்கிரெஸ்காரன்தன் அதனால
இந்த நாட்டை விட்டு இன்னும் வெள்ளைக்காரன்
போகல காங்கிரெஸ் என்ற பேர்ல இன்னும் இந்தியால
தான் இருக்கான் காங்கிரெஸ் எப்போ ஒழியுதோ
தமிழ் மக்களுக்கு எப்போ நியாயம் கிடைக்குதோ
அப்போதான் நான் சுதந்திர தினத்தை கொண்டாடுவேன்
காங்கிரேசை ஒழிப்போம் தமிழன் தன்மானத்தோடு
சுதந்திர தினத்தை கொண்டாடுவோம்
அப்படி இல்லை இதில் ஏதும் நமக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் இந்தசுதந்திரத்தை கொண்டாடும் தமிழன் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் அல்ல
- முரளிகிருஷ்ணன் சின்னதுரை

Monday, July 18, 2011

அண்ணா எழுப்பிய கேள்விகள்

திராவிட நாடு இதழில் (16ச்.1.1944) மூட நம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத்திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?

2) அது எது?

3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?

4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?

5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள்கைகள் என்ன?

6) அதற்கு ஆதாரம் யாது?

7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கட வுளாகக் கொண்டதா?

8) அல்லது தனித் தெய்வமில்லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப் படையாகக் கொண்டதா?

9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?

10) ஒரு தன்மையா?

11) ஒரு குணமா?

12) சிவனுக்கு உருவம் சொல்லப்படு கிறதே- அது ஏன்?

13) அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?

14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக் கான பெயர்கள் வடமொழியில் இருப் பானேன்?

15) ஆயிரக்கணக்கான கடவுள் களுக்கும் அவர்களது பெண்டு பிள்ளை களுக்கும் வேறு வேறு பெயர்கள் ஏன்?

16) சைவத்திற்கும், சமணக் கொள் கைகளுக்கும், பவுத்த கொள்கை களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

17) ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள் ளுகின்றதா? மறுக்கின்றதா?

18) சைவ சமயாச்சாரியர்கள் என் பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்விகளையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக்கின்றனரா?

19) சமணர்கள் வேத வேள்வியை நிந் தனை செய்தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?

20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந் தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?

21) சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?

22) சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?

23) சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர்களையும் துன்புறுத்தியதேன்?

24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப் பதேன்?

25) வடமொழிக் கதைகளையும் வட மொழி புராணங்களையும் தள்ளிவிட்டால் சைவர்களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?

26) சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?

27) எத்தனைக் கடவுள்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன?

28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?

29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?

30) விக்ரக ஆராதனை உண்டா?

31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?

32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?

33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?

34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?

35) சைவக் கோயில்களில் இப் போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படு கின்றதா?

36) அது சைவத்திற்கு முரணானது அல்லவா?

37) முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?

38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?

39) ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல் லப்பட்டால் அது ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?

40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வரு கிறது?

41) பிள்ளையார் என்ற ஒரு கட வுளுக்குச் சைவத்தில் இடம் இருக் கின்றதா?

42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றனரா?

43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?

44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகாபுராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?

45) நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

46) அவைத் தனித்தனி கடவுள் களா?

47) நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?

48) மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

49) சமணர்கள் கழுவேற்றப்பட்ட தைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின் றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங் கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?

50) திருநீறு எதற்காகப் பூசுவது?

51) இலிங்கத்திற்கும், ஆவுடையா ருக்கும் சொல்லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?

52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?

53) இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?

54) கைலயங்கிரி எது? சுப்பிரமணி யன் எது? கந்தன் எது? குமரன் எது?

55) மலையரசன் மகனென்றால் என்ன?

56) இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவைகளால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?

57) இவை இப்படியே நடக்க வேண் டியது தானா?

58) இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?

59) அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்ப லாமா? அல்லது இப்படியே இருக்க வேண்டுமா?

60) சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண்டார்களா?

61) மறுபிறப்பை ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

62) திதிகளை ஒப்புக் கொள்ளுகின் றார்களா?

63) பிராமணர்களை ஒப்புக்கொள்ளு கின்றார்களா?

64) சமயாச்சாரிகளின் அற்புதங் களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்த தாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ் வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தலமூர்த்தி தீர்த்த புராணங்களை உண்மை என் பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?

67) சைவர்களுக்குச் சரியான முறை எது?

68) சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?

69) வருணாசிரமம் உண்டா?

70) உண்டென்றால் ஆதாரம் எது?

71) இல்லை என்றால் ஆதாரம் எது?

72) இப்பொழுது அமலில் இருப் பதற்குக் காரணம் என்ன?

73) சைவ மடங்கள் எதற்கு?

74) அவைகள் இதுவரைச் சாதித்த தென்ன?

75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?

76) இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?

77) இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சமயத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?

78) அருகதை உடையவர் யார்?

79) பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளு கின்றார்களா?

80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல்களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?
POSTED BY PASITHAMIZHAN
கூவி அழைக்கிறோம்!


மனித சமூகத்தினரிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை-யுள்ள மக்களை அப்படிப்பட்ட சமதர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்-களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும் பொறுத்த இயக்கம்.

ஜாதி, மதம், வருணம், தேசம் என்கிற கற்பனை நிலைகளை எல்லாம் தாண்டிய இயக்கம், பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற வருணங்களை ஒழித்து எல்லோரும் எப்பொழுதும் மனிதரே என்று கூவும் இயக்கம்.

ஏழை என்றும் பணக்காரன் என்றும், எஜமானன் என்றும், கூலி என்றும் ஜமீன்தாரன் என்றும், குடியானவன் என்றும், உள்ள சகல வகுப்புகளையும், வேறுபாடுகளையும், நிர்மூலமாக்கித் தரைமட்டமாக்கும் இயக்கம்.

மற்றும் குரு என்றும், சிஷ்யன் என்றும், பாதிரி என்றும், முல்லா என்றும், முன் ஜென்மம் பின் ஜென்மம் என்றும், கர்ம பலன் என்றும், அடிமையையும் எஜமானனையும், மேல் ஜாதிக்காரனையும் கீழ் ஜாதிக்-காரனையும், முதலாளியையும் தொழிலாளி-யையும், ஏழையையும் பணக்காரனையும், சக்ரவர்த்தியையும், குடிகளையும், மகாத்மா-வையும், சாதாரண ஆத்மாவையும் அவன-வனுடைய முன் ஜென்ம தர்மத்தின்படி அல்லது ஈஸ்வரன் தன் கடாட்சப்படி உண்டாக்கினார் என்றும் சொல்லப்படும் அயோக்கியத்தனமான சுயநலங்கொண்ட சோம்பேறிகளின் கற்பனைகளையெல்லாம் வெட்டித் தகர்த்து சாம்பலாக்கி எல்லோர்க்-கும், எல்லாம் சமம்; எல்லாம் பொது என்ற நிலையை உண்டாக்கும் இயக்கமே!

ஜாதி, சமய, தேசச் சண்டையற்று -_ உலக மக்கள் யாவரும் தோழர்கள் என்று சாந்தியும் ஒற்றுமையும் அளிக்கும் இயக்-கம். ஆதலால், அதில் சேர்ந்து உழைக்க வாருங்கள் வாருங்கள் என்று கூவி அழைக்கிறோம்.

Thursday, June 23, 2011

பண்டைய தமிழரின் அளவுகள் - MEASUREMENTS OF ANCIENT TAMIL PEOPLE

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..
பழம் நூல்களை ஆய்வு செய்யும்போது எம் தமிழர் எவ்வளவு அறிவாளிகளாகவும், நுண்ணிய சிந்தனை உடையவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள் என்று மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது.இப்போதைய தமிழர்களை நினைத்தால்.... சரி விடுங்க..!ஒன்று என்ற எண்ணும், அதன் பல கூறுகளும்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த் துகள்.

@ நீட்டலளவு..

10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1 துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1 நுண்மணல்
8 நுண்மணல் - 1 சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200 கெசம்)
4 காதம் - 1 யோசனை
@ பொன்நிறுத்தல்..
4நெல் எடை - 1 குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1 வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்
@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1 வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்
@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - ௧ பொதி
__________________

கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1 ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்
__________________
எண்ணல் அளவை..
ஒன்றிலிருந்து கோடி வரை அனைவரும் அறிந்தவையே....கோடிக்கு பிறகான எண்களின் பெயர்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்

ஆரியமும் காரியமும் !!!!!!!!!! ஆரியமும் காரியமும் !!!!!!!!!

ஆரியன் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிருப்பான்!

தென்காசிப் பார்ப்பானுக்குத் தேள் கொட்டினால்
வடகாசி பார்பானுக்கு நெறிக் கட்டும்!

பார்பான் கெஞ்சினால் மிஞ்சுவான்;
மிஞ்சினால் கெஞ்சுவான்!

பார்பான் பண்ணையம்
கேட்பாரில்லை!

பாழாங்கிணறும்
பார்ப்பான் வயிறும் ஒன்றே!

பார்பான் தின்னாத பண்டமில்லை;
அவன் செய்யாத அக்கிரமம் இல்லை!

சிறுத்தை தன புள்ளிகளை மாற்றினாலும்
பார்ப்பானின் பிறவிக் குணம் மாறாது!

பார்ப்பான் வாழும் நாடு;
கடும் புலி வாழும் காடு!

ஒத்தப் பார்ப்பான் சகுனம் அல்ல ;
ஒட்டு மொத்தப் பார்பனருமே ஆகாது!

பார்பான் தயவை நாடுவானையே
பார்பான் திண்ணப் பார்ப்பான்

கீழ்மைக் குணமே பார்பனரின்
வாழ்க்கை நலன்!

பார்பான் சூழ்ச்சியே,
தமிழர் வீழ்ச்சி!

தமிழை கொச்சைப் படுத்திப் பேசும்
மீலேச்சப் பார்ப்பான்

பக்தி நெறி என்று பாவையரின் பெண்குறி
சுட்டும் காமவெறி பார்பான்!

போஜனப் பிரியா பார்பான்
வெகுஜன விரோதி யாவான்!

அறுக்கத் தாலி கட்டச் சொல்லிவிட்டு
தீர்க்க சுமங்கலி என்று புரட்டு செய்யும் பார்ப்பான்!

காந்தியை கொன்ற பார்ப்பான்; சாது போல்
நிறம் மாறிக் காட்டும் பச்சோந்திப் பார்ப்பான்!

தீட்டு போக்கும் பார்ப்பான் மந்திரம்;
திருட்டுப் புத்தி தந்திரம்!

நெல்லில் பதர் போல்
மனிதரில் பார்ப்பன்!

மரத்தில் பில்லுருவி போல்
சமுதாயத்தில் புல்லேந்திப் பார்ப்பான்!

பொதுவிடத்தில் மூட்டைப் பூச்சி போல்
பொது மக்களிடையே உஞ்ச விருத்திப் பார்ப்பான்!

பழத்துக்குள் வண்டு பூச்சி போல்;
தமிழகத்துக்குள் சிண்டுப் பார்ப்பான்!

தடாகத்தில் தூரற்ற பாசிப் போல்;
தமிழ்நாட்டில் நாடற்ற பார்ப்பனர்!

முருங்கை மரத்தில் வேதாளம் என்ற புரட்டு போல்;
பூணூலில் உயர் சாதி என்ற உலக மகா புரட்டு!

தானம் கொடுத்தவன் தலையில் காலை
வைத்தானாம் குள்ளப் பார்ப்பான்!

வாழ்வு கொடுத்த தமிழரை தாழ்வு
செய்கிறான் கள்ளப் பார்ப்பான்!

முட்டி புகும் பார்ப்பாரகத்தை
எட்டி பாராமோ!

பைத்தியத்தின் செய்கையும் பார்ப்பனர் செய்கையும்
அர்த்த மற்ற ஒன்றே!

பெரு வியாதியும் உயர் சாதியும்
ஒழிக்கப் பட வேண்டிய ஒன்றே!

பார்ப்பான் போடும் தனி சாதி வேஷம்;
தமிழரை இழிவு செய்யும் துவேழம்!

தமிழன் பகை என்றால் சமர் செய்வான்;
ஆரியன் பகை என்றால் சதி செய்வான்!

பார்ப்பான் செய்யும் மோசடியை மறைக்கச்
செய்யும் மதத் திரை தான் "சாஸ்த்திரம்" என்பது!

பைத்தியத்துக்கும் தேவை செத்தையும் சொத்தை
பார்ப்பானுக்குத் தேவை ஏமாளியும் பேமாலியும்!

மானத்தையும் ஞானத்தையும் இழந்தவனே
பார்ப்பானை மதிப்பான்!

மதிக்கும் மனிதரை அன்புடன் நேசி!
மதியாத பார்ப்பான் உன் கால் தூசி!

சாகும் நிலையில் கழுதை காலை
வேகமாக உதைப்பது போல்; அழிந்துக்
கொண்டிருக்கும் ஆரியமும் அப்படித் தான் செய்கிறது!

எத்தால் வாழும் பார்ப்பனர்! -- நாம்
ஒத்தால் வீழ்வார் அற்ப்பர்!
______________________________________________________________
குறிப்பு:
சுவரெழுத்து புரட்சியாளர்
சுவரெழுத்து சுப்பையா
சிந்தனை பொறிகள்
என்னும் தொகுப்பிலிருந்து....

Monday, June 20, 2011

பாடல்: சங்கே முழங்கு


சீர்காழிகோவிந்தராஜன்:
                                                          சங்கே முழங்கு சங்கே முழங்கு .......................
ப.சுசீலா :
                                 சங்கே முழங்கு சங்கே முழங்கு ....................
இருவரும் : 
                                 சங்கே முழங்கு சங்கே முழங்கு ......................
ப.சுசீலா :
                                 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு........... சங்கே முழங்கு.................
                                 எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு 
                                 எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே 
                                 பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.... ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
                                 பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு.................
இருவரும் :
                                                          சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு................
ப.சுசீலா :
                                 திங்களுடன் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுத்தலோடும் 
                                 மங்கு, கடல், இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் .................
                                 தமிழுடன் பிறந்தோம் நாங்கள்.......................
சீர்காழிகோவிந்தராஜன்:
                                                         ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும் சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே....................
இருவரும் :
                                 சங்கே முழங்கு ........................ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ..............

                                 வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
                                 வெற்றித் தோள்கள் .....................ஆஆஆஆஆஆஆஆஆஆ............
                                 கங்கையைப் போல் காவிரி போல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்.................
                                 வெங்குருதி தனிழ்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்
                                 

Thursday, June 16, 2011

மானே கலைமானே ,சொந்த வாசகம்தான் என் பாட்டு,  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே, எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் .........ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம், 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ............. 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று, 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ............

சொல்ல சொல்ல சோகமடி ..........நான் செல்லரிச்ச புத்தகம்தான்.............. 
சொந்த பந்தம் இல்லாம........... நான் காயம் பட்ட சித்த்கிரம்தான்............ 
காதலென்னும் கோயில் காணவில்லை கிளியே, அடியே........... பெண்ணே............. 
நந்தவனம் இங்கே வேந்தபின்னே  நீரோ, விழியோரம் ஈரமென்ன மானே, 

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு..........  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று................ 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட, 
கிழக்குவானில் எதோ சோகம் நீதான். காரணம் ஓஈ.............
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்.......... 

சின்ன சின்ன பூவினிலே ஒரு சிங்கரமேத்தை இட்டு ,
வண்ண வண்ண சொல்லெடுத்து ........ஒரு தெம்மாங்கு நான் படிச்சேன்..............
வாசமல்லி ஏனோ வாடிபொச்சி மயிலே அடியே............. பெண்ணே .................
ஆச தேரோ ஆடிபோச்சி தேனே, என் வீட்டில் தீபம் இல்லை மானே ,

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு ........... 
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று............... 
செந்தேனே செந்தேனே கண் மூடாதே எந்நாளும் என்பாடல் கண்ணீரோட 
(பெண்ண )
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம் ஓஈ
கிழக்குவானில் எதோ சோகம் நீதான் காரணம்............. )

மானே கலைமானே சொந்த வாசகம்தான் என் பாட்டு.............  
நானே அழுதேனே அந்த நபகம்தன் பூங்காற்று .....................

Saturday, May 14, 2011

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் »

அதிமுக கூட்டணி வெற்றி தோல்வி
அ.தி.மு.க.                  147                   13
தே.மு.தி.க.,                 29                   12
மா. கம்யூ.                       9                     3
இ. கம்யூ.,                        9                     1
மூ.மு.க.                          0                     1
ம.ம.க                               1                     1
ச.ம.க.,                              2                     0
பு.த.,                                   1                     0
பா.பி.,                                1                     0
இ.கு.க.,                             1                     0
கொ.இ.‌பே                       1                     0
______________________________________________________________________________________

திமுக கூட்டணி வெற்றி தோல்வி
தி.மு.க.                         23              96
காங்.,                               5              58
பா.ம.க. ,                         3              27
வி.சி.                               0              10
கொ.மு.க.,                    0                7
இ.யூ.மு.லீக்                 0                3
மூ.மு.க.,                       0                1
பெ.ம.க                           0                1
________________________________________________________________________________________________________________________________________________________________________



மற்றவை வெற்றி தோல்வி
பா.ஜ.,                    0                   0
இ.ச.ஜ.க.,             0                   0
ஐ.ஜ.த.,                  0                  0
யா.ம.,                    0                  0
ஜனதா                   0                  0
இ.ஜ.க.,                  0                  0
நா.ம.க.,                 0                  0
பு.பா.,                      0                  0
பகுஜன்                 0                  0
மக்கள் சக்தி       0                  0
பா.பி                      0                  0
சுயேட்சை           0                  0

Sunday, May 1, 2011

என்னமோ எதோ

என்னமோ ஏதோ.. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் திரளுது நினைவில்.. கண்கள் இருளுது நனவில்......
என்னமோ ஏதோ.. முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்.. மொட்டு ஆவிழுத் கோடியில் .......

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ்.. அரைமனதாய் விடியிது என் காலை..

என்னமோ ஏதோ..மின்னிமரயிது விழியில்..
அந்தி அகலுது வழியில்.. சிந்தி சிதறுது விழியில்..
என்னமோ ஏதோ.. சிக்கி தவிக்குது மனதில் ..
ரக்கை விரிக்குது கனவில்.. விட்டு பறக்குது தொலைவில்.

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை..
ஓஹ் ஓஹ் .. உருவமில்லா உருவமில்லா நாளை ..

ஏனோ

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. அரைமனதாய் விடியிது நாளை .


நீயும் நானும் எந்திரமாய் , யாரோ செய்யும் மந்திரமா , பூவே ..


முத்தமிட்ட மூச்சுக் காற்றில் , பட்டு பட்டு கெட்டு போனேன் ,
பக்கம் வந்து நிற்கும் பொது , திட்டமிட்டு எட்டி போனேன் ..
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் ,
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சகும் ..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும் ..

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில் ..
வண்ணம் திரளுது நினைவில் .. கண்கள் இருளுது நனவில் ..
என்னமோ ஏதோ .. முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் .. மொட்டு அவிழுது கோடியில் ..
நீயும் நானும் எந்திரமாய் , யாரோ செய்யும் மந்திரமா , பூவே ..

Let’s Go.. Wow.. Wow..
உங்களின் தமிழச்சி .. என்னமோ ஏதோ You’re Looking Too Black,
மறக்க முடியலையே என் மனம் ஒன்று ..
உன் மனசோ லவ்லி , இப்படியே இப்போ
உன் அருகில் வந்து சேரவா இன்று .
லேடி லூகிங் லைக் A சின்ட்ரெல்ல சின்ட்ரெல்லா ,
நாடி லுக் ’கு விட்ட தென்றல் ’லா..
லேடி லூகிங் லைக் A சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா , என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..
லேடி லூகிங் லைக் A சின்ட்ரெல்லா சின்ட்ரெல்ல ,
நாடி லுக் ’கு விட்ட தென்றல் ’லா ..
லேடி லூகிங் லைக் A சின்ட்ரெல்லா , என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..

சுத்தி சுத்தி உன்னை தேடி , விழிகள் அலையும் அவசரம் ஏனோ ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல் , செவிகள் அறியும் அதிசயம் ஏனோ ..
கணாக்கான தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ ..
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ ..
நிழலை திருடும் மழலை நானோ ..

ஏதோ (All Right)… எண்ணம் திரளுது கனவில் (அஹ ஹா )..
வண்ணம் திரளுது நினைவில் (Come On).. கண்கள் இருளுது நனவில் ..
ஓகோ ஏதோ (Yaeh ).. முட்டி முளைக்குது மனதில் (Alright)..
வெட்டி எறிந்திடும் நொடியில் (Get Loose).. மொட்டு அவிழுது கோடியில் ..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. உருவமில்லா உருவமில்லா நாளை ..
ஏனோ

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. அரைமனதாய் விடியிது என் காலை ..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. உருவமில்லா உருவமில்லா நாளை ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேழை ..
ஓஹ் ஓஹ் .. அரிமானத்தை விடியிது என் காலை ..

Saturday, April 30, 2011

கன்னி தீவு பொண்ண

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

தான....ந...ந...நா....,தான... ந...ந...நா...தான.....ந.....ந.....ந.....நா...............

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா....

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா....

மத்தாப்பு போல............ சிரிச்சிட்டு போனா......

கித்தாப்பு எல்லாம், மிதிச்சிட்டு போனா.........

இந்த வப்பாட்டிய பாத்து, என் பொண்டாட்டிய மறந்தேன்,
இவா முந்தானைய மோந்து.... நான் மோப்பம் புடிச்சி நடந்தேன்.....


கன்னித்தீவு பொண்ணா...........கட்டெறும்பு கண்ணா............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா......

மஞ்ச சேலையோடு, ஒரு மாசி கருவாடு

ஆட்டம் போட்டு ஆடு, இது வானவில்லு ரோடு

தர்பூசு பழதுக்கே நீ, தண்ணீ காட்டதே............

கடிச்சா கசக்காத சுவீட்டு பீடா நீ........

குடிச்ச ஏப்பம் வரும் கோலிசோட நீ ...................

இடிச்சா உசுரு போகும், தண்ணீ லோர்ரி நீ

அடிச்சா போத வரும், பாண்டிச்சேரி நீ.............

உன் சம்மதத சொன்னா, என் சம்பளத்த தருவேன்
நீ கை நழுவி போனா, நான் கண்ணு தேய அழுவேன்


கன்னித்தீவு பொண்ணா...........கட்டெறும்பு கண்ணா..............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா......

வெண்ணிலா கேக்கு என.. விட்டு தர நாக்கு .
கொள்ளிகட்ட நாத்து, என.. கொப்பளமா ஆக்கு .
தஞ்சாவூரு தட்ட ஏந்தி பிச்ச கேக்காத .
உருட்டி விளையாடும் தாய கட்ட நீ................
வழுக்கி விழ வைக்கும் வாழ மட்ட நீ ..............
மணக்கும் மலையாள கொழா புட்டு நீ ....................
திரும்பி பாக்காத தெனாவெட்டு நீ.......................
இவ கண்ணா குழியோடு, வந்து பல்லாங்குழி ஆடு,
என்ன முத்தமிட்டு மூடு, கொஞ்சம் சத்துணவு போடு ..


கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா .............
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா ...................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா.........

மத்தாப்பு போல............ சிரிச்சிட்டு போனா......

கித்தாப்பு எல்லாம், மிதிச்சிட்டு போனா.........

இந்த வப்பாட்டிய பாத்து, என் பொண்டாட்டிய மறந்தேன்,
இவா முந்தானைய மோந்து.... நான் மோப்பம் புடிச்சி நடந்தேன்.....

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா ...................
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா.................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா...........

கன்னித்தீவு பொண்ணா கட்டெறும்பு கண்ணா...................
கட்டு மாற துடுப்ப போல இடுப்ப ஆட்டுறா.........................
இவ கள்ளுப்பான உதட்ட காட்டி கடுப்பு ஏத்துறா.......

Saturday, April 2, 2011

வாழ்க்கை குறிப்பு

1909 - காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரத்தில், எளிய நெசவாளர் குடும்பத்தில், நடராசன்-பங்காரு அம்மாள் தம்பதியருக்கு செப்டம்பர் 15 அன்று பிறந்தார். இவரது வளர்ப்புத் தாய், சிற்றன்னை இராசாமணி அம்மையார்.

1914 - காஞ்சிபுரம், பச்சையப்பன் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றார்.

1927 - காஞ்சிபுரம் நகராட்சியில் எழுத்தராக சில மாதங்கள் பணிபுரிந்தார்.

1928 - சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இன்ட்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்து படித்தார்.

1929 - பிப்ரவரி 17, 18 தேதிகளில் செங்கல்பட்டு நகரில் நடந்த, முதல் மாநில சுயமரியாதை மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொண்டார்.

1930 -

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் உதவியால், சம்பளச் சலுகை பெற்று பி.ஏ.(ஆனர்ஸ்) வகுப்பில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, பெற்றோர் விருப்பப்படி, காஞ்சிபுரத்தில் அண்ணாவுக்கும், இராணி அம்மையாருக்கும் திருமணம் நடந்தது.

1931 -

மார்ச் 19ல் தமிழ் மருத்துவர் மாசிலாமணி முதலியார் நடத்திய "தமிழரசு" என்ற ஏட்டில் "மகளிர் கோட்டம்" என்னும் கட்டுரையே இவர் எழுதி வெளிவந்த முதல் கட்டுரையாகும்.

1932 -

நீதிக்கட்சி அரசின் முதலமைச்சரான பொப்பிலி அரசர் தொடர்பு அண்ணாவுக்கு ஏற்பட்டது.

1934 -

திருப்பூரில் நடந்த ஒரு மாநாட்டில் முதன் முதலாக தந்தை பெரியாரைச் சந்தித்து உரையாடினார். அன்று முதல் பெரியாரைத் தனது ஒரே தலைவராக ஏற்றார். பி.ஏ.(ஆனர்ஸ்) பட்டம் பெற்றதும், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். பொருளாதார வசதி இன்மையால் மூன்று மாதங்களுக்கு மேல் சட்டப்படிப்பைத் தொடர முடியவில்லை.

1935 -

சென்னையில் உள்ள தொண்டை மண்டல துளுவ வேளாளர் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகச் சில மாதங்கள் பணியாற்றினார்.
நீதிக் கட்சித் தலைவர் சி. பாசுதேவ் அவர்களோடு சேர்ந்து தொடங்கிய ‘பால பாரதி’ என்ற வார ஏட்டிற்கு ஆசிரியராக இருந்து தொழிலாளர் நலம் பேணும் கட்டுரைகளை வரைந்தார்.

1936 -

சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெத்துநாயக்கன் பேட்டையில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

1938 -

‘விடுதலை’ , ‘குடியரசு’ ஏடுகளின் துணை ஆசிரியர் ஆனார். ‘ஜஸ்டிஸ்’ என்ற ஆங்கில ஏட்டிற்கும் துணை ஆசிரியராக இருந்தார். செப்டம்பர் 26ல் பெரியார் தலைமையில் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்று நான்கு மாதம் சிறைவாசம் ஏற்றார்.

1939 -

நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1940 -

மும்பை (பம்பாய்) தந்தை பெரியார் -
டாக்டர் அம்பேத்கர் சந்திப்பின்போது, மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.

1942 -

மார்ச் 7 : ‘திராவிட நாடு’ வார ஏட்டின் ஆசிரியர் ஆனார்.

1944 -

சேலம் நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணா தீர்மானம் மூலம், நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்றது.

1945 -

டிசம்பர் : "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்னும் நாடகம் அரங்கேற்றம். இதை அண்ணா அவர்களே எழுதி அதில் ‘காகபட்டர்’ பாத்திரம் ஏற்று நடித்தார்.

1946 -

ஜூலை 29 : நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அண்ணா பொற்கிழி அளித்தார்.

1947 -

ஆகஸ்ட் 15 : இந்நாளை பெரியார் துக்க நாள்
எனல் பொருந்தாது என்றும், இந்நாள் திருநாளே என்று திராவிடநாடு ஏட்டில் அண்ணா எழுதினார்.

1948 -

ஜூலை 17 : இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைவாசம் ஏற்றார்.

1949 -

ஜூலை 9 : தந்தை பெரியார் - மணியம்மையார் திருமணம் நடந்தது.
அண்ணாவும் மற்றும் பலரும் திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்து செப்டம்பர் 17இல் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்தனர்.
தி.மு.க.வின் முதல் பொதுச் செயலாளராக அண்ணா பொறுப்பேற்றார்.

1950 - "ஆரியமாயை" என்னும் நூல் எழுதியதற்காக ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1952 - இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டு - இந்தி எழுத்துக்களை அழித்தார்.

1953 -

ஜூன் 15 : ‘நம்நாடு’ நாளிதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
ஜூலை 15 : மும்முனைப் போராட்டத்தில் முன்னதாகவே கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

1955 -

ஜனவரி 14 : அண்ணா, கதை வசனம் எழுதிய ‘சொர்க்கவாசல்’ என்னும் திரைப்படம் வெளிவந்தது.

1956 -

மே 17-20 : திருச்சிராப்பள்ளியில் நடந்த தி.மு.க. இரண்டாவது மாநில மாநாட்டில் பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தி, தி.மு.க. பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குப் பொதுமக்கள் அனுமதியைப் பெற்றார்.

1957 - காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 9 : ‘ஹோம்லேண்ட்’ ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.

1958 -

ஜனவரி 3 : பிரதமர் நேரு அவர்கள், ஜனவரி 6ல் சென்னைக்கு வரும்போது, கருப்புக் கொடி காட்டத் திட்டமிட்டதால் கைது செய்யப்பட்டு சிறைவாசம் ஏற்றார்.

1962 -

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதித் தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார்.
‘ஹோம் ரூல்’ ஆங்கில வார இதழ் ஆசிரியர் ஆனார்.

ஜூலை 19: விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் பத்து வாரம் கடுங்காவல் தண்டனை பெற்றார். இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. விடுதலையான அண்ணா நாட்டின் யுத்த முயற்சிகளுக்குப் பல உதவிகள் செய்தார்.

1963 -

ஜனவரி : கட்சியின் கோரிக்கை பிரிவினை அல்ல என்பதற்கேற்ற மாற்றம் செய்து கட்சியைக் காப்பாற்றினார்.

நவம்பர் 17 : கட்டாய இந்தி 17ஆவது மொழிப் பிரிவுச் சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் நவம்பர் 16 அன்றே கைதாகி, ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

1964 -

ஜூலை 26 : ஆசிரியர் பொறுப்பேற்று ‘காஞ்சி’ வார ஏட்டைத் தொடங்கினார்.

1965 -

ஜனவரி 26 முதல், இந்தியை, இந்திய யூனியன் ஆட்சி மொழியாக்க நாடாளுமன்ற ஆட்சி மன்றக்குழு பரிந்துரை செய்ததை எதிர்த்து,

‘ஜனவரி 26 துக்க நாள்’ என தி.மு.க. அறிவித்தது தொடர்பாக அண்ணா சிறைவாசம் ஏற்றார்.

ஜூலை : சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், கம்போடியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று வந்தார்.

1967 - பொதுத் தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பொதுத் தேர்தலில் சட்டமன்றத்தில் தி.மு.க. பெரும்பான்மை இடங்களை வென்றது.

மார்ச் 6 : நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 26 : தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார்.

மே 15 : ரூபாய்க்குப் படியரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

ஜூலை 18 : சென்னை மாநிலத்தை ‘தமிழ்நாடு’ என்று அழைக்க அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றச் செய்தார்.

ஜூலை 23 : சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, தமிழ் நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள்’ நடத்தினார்.

ஆகஸ்ட் 16 : சீரணி என்னும் அமைப்பினை உருவாக்கினார்.

செப்டம்பர் 19 : சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

1968 -

ஜனவரி 1 : உலகத் தமிழ் மாநாட்டினை ஒட்டி, டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களால் வழங்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச்சிலை சென்னை மவுண்ட் சாலையின் (தற்போதைய அண்ணா சாலை) மையத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஜனவரி 2 : தமிழ் வளர்த்த சான்றோருக்கு, சென்னை கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார்.

ஜனவரி 3 : உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ.9 இலட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார்.

ஜனவரி 23 : தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தைச் சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார்.

ஏப்ரல், மே : அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் சென்று வந்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் "சப்-பெலோஷிப்" விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரைச் சந்தித்தார்.

செப்டம்பர் 8 : அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், அண்ணாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

செப்டம்பர் 16 : அமெரிக்காவில் உலகப்புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவமனையான மெமோரியல் மருத்துவமனையில், டாக்டர் மில்லர் என்பவரால் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நவம்பர் 6 : சிகிச்சை முடிந்து அண்ணா சென்னை திரும்பினார்.

டிசம்பர் 1 : உடல்நலம் கெட்டிருந்தும் மருத்துவர்களின் ஆலோசனையை மீறி, சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் விழாவில் கலந்துகொண்டு பேசினார்.

1969 -

ஜனவரி 14 : பொங்கல் தினத்தில் சென்னை தியாகராய நகரில், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அதுதான் அண்ணா கலந்துகொண்ட கடைசிப் பொது நிகழ்ச்சி.

ஜனவரி 25 : அமெரிக்க டாக்டர் மில்லர் சென்னை வந்து அண்ணாவுக்கு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தார்.

பிப்ரவரி 3 : (பிப்ரவரி 2 நள்ளிரவு 12-20 மணி) சென்னையில் இயற்கை எய்தினார்.
அண்ணாவின் உடல், பொது மக்கள் அஞ்சலிக்காக இராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டது.

பிப்ரவரி 4 : அண்ணாவின் உடல் அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்திற்கு எதிரில் மெரினா கடற்கரையில் காலை 11.30 மணிக்கு சந்தன மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது

Sunday, March 27, 2011

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-5


குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.

-o0o00o000o00o0o-


அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

(வரலாறு வளரும்)


திரு

Monday, March 21, 2011

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-4

குயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.

குயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

******

யுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.

பெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய "மூலதனம்" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.

The Me Bird by Pablo Neruda

I am the Pablo Bird,
bird of a single feather,
a flier in the clear shadow
and obscure clarity,
my wings are unseen,
my ears resound
when I walk among the trees
or beneath the tombstones
like an unlucky umbrella
or a naked sword,
stretched like a bow
or round like a grape,
I fly on and on not knowing,
wounded in the dark night,
who is waiting for me,
who does not want my song,
who desires my death,
who will not know I'm arriving
and will not come to subdue me,
to bleed me, to twist me,
or to kiss my clothes,
torn by the shrieking wind.

That's why I come and go,
fly and don't fly but sing:
I am the furious bird
of the calm storm.


ஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.

ஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.

சிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற பகுதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.

பொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.

ஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள் 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.
(வரலாறு வளரும்)

Thursday, March 17, 2011

சே குவேரா: வரலாற்றின் நாயகன்-3

ர்ஜென்டினாவில் 1930ல் ஏற்பட்ட புரட்சியின் பின்விளைவாக பொருளாதாரம் பாதிப்புக்குள்ளானது. அர்ஜென்டினாவிலிருந்து மாட்டிறைச்சி, கோதுமை முதலியவை ஐரோப்பியாவிற்கு ஏற்றுமதியை மையமாக உற்பத்தி நடைபெற்றது. உள்நாட்டில் மக்களுக்கு தேவையான பொருட்கள் கடுமையாக விலையேறியது. பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் தங்களது வாழ்விற்காக வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயர்ந்தனர். புயெனெஸ் எயர்ஸ்ல் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பேர் கிராமப்புறங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தார்கள். ஏழைகள், நடுத்தர வர்க்கம், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க துவங்கியது. பாதிப்புக்குள்ளான மக்கள் சமூக போராட்டங்கள், கருத்தியல் அடிப்படையில் அணிசேர்வது என அல்டா கிரேசியாவின் காலச்சாரச் சூழலும் மாறியது. இதன் தாக்கம் ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. அவர்கள் குடியிருந்த வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு மாற்றம் அடிக்கடி நடந்தது. சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு இடம் விட்டு இடம் மாறுவது என்பது பழக்கமாகியது.

அவர்கள் வசித்த வீடு கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரமான இடம். உடல்நிலைக்கு ஏற்ற சுத்தமான, இனிமையான காலநிலையுள்ள சிறிய நகரம் தான் அல்டா கிரேசியா. ஏர்னெஸ்டோவின் தந்தையார் அந்த நகரின் பணக்கார, மத்தியதர குடும்பத்தினர்களுக்கு வீடு கட்டும் வேலை செய்துகொண்டிருந்தார். ஏர்னெஸ்டோவின் தந்தையார் மிகவும் நட்பாகவும் பொறுப்புடனும் பழகக்கூடியவர். கடினமான வேலை செய்துகொண்டிருந்தாலும் அவர் குழந்தைகளை பாசமுடன் கவனித்தார். ஏர்னெஸ்டோவுடன் நீச்சல், கோல்ப்(golf) விளையாடுதல் என இனிமையாக தனது ஓய்வு நேரங்களை செலவிட்டார். ஏர்னெஸ்டோவுக்கு தனது செல்ல நாயின் முதுகில் அமர்ந்து விளையாடுவது, உடன்பிறந்தவர்களுடன் விளையாடுவது என குழந்தைப்பருவம் இனிதாக இருந்தது. தொடர்ந்த மருத்துவம், இதமான சூழல், அன்னையின் அரவணைப்பு அனைத்துமாக ஏர்னஸ்டோவின் குழந்தைப்பருவம் நகர்ந்தது. மற்ற எல்லா குழந்தைகளையும் விட தாயின் அரவணைப்பு ஏர்னெஸ்டோவுக்கு அதிகமாகவே அமைந்தது. அன்னையின் அன்பான பார்வையில் விளையாட்டும், கரங்களை பிடித்தபடியே நடப்பது வருவது என இருவருக்குமிடையே பாசப்பிணைப்பு அதிகமாக இருந்தது.

புத்தகம் படிபதில் அடங்காத அறிவுப்பசியுடன் வளர்ந்தார் ஏர்னஸ்டோ. ஆஸ்துமாவின் அழுத்ததினால் 9 வயது வரை தாயின் கவனிப்பில் வீட்டிலேயே படித்தார் ஏர்னெஸ்டோ. 2 வது மற்றும் 3வது வகுப்புகள் மட்டுமே முறையாக பள்ளிக்கூடத்தில் கற்றார். அவரது உடன்பிறந்தவர்கள் 5வது, 6வது வகுப்பறை பாடங்களை எழுதிக்கொண்டுவந்து கொடுக்க வீட்டிலிருந்தவாறு படித்துவந்தார். ஆஸ்துமாவை எதிர்கொள்ள மனபலம் அவசியம் என்பதையுணர்ந்த அவரது பெற்றோர் அதற்கான உடற்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தனர். மலையேறுதல், ஓட்டப்பயிற்சி, நீச்சல், குதிரையேற்றம் என பயிற்சிகள் வழியாக ஒரு அசாதாரணமான மன உறுதியை சிறுவயதிலேயே பெற்றிருந்தார். உடல் பலவீனத்தை எதிர்கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் அவரை ஒரு ஆளுமை மிக்கவராக வளர்த்தியது. சிறு வயதிலேயே பல தரப்பட்ட மக்களிடம் குறிப்பாக தன்னையொத்த வயதினரிடம் பழகியதில் ஏர்னெஸ்டோவுக்கு பல நண்பர்கள் கிடைத்தனர். கட்டிடவேலை செய்த உதவியாட்களின் பிள்ளைகள் முதல் நடுத்தர வீட்டு பிள்ளைகள் வரை அனைவரிடமும் தொடர்புகள் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. அவர்களிடம் பழகுவதோ நட்புடன் விளையாடுவதோ அவருக்கு கடினமாக இல்லை. சிறுவயதிலேயே அவரிடம் தலைமைக்கான ஆளுமை இருந்தது. அல்டா கிரேசியாவின் சிறுவயது நண்பர்கள் மத்தியில் ஏர்னெஸ்டோ தனித்தன்மையுடனே இருந்தார்.
லத்தீன் அமெரிக்காவில் புகழ் வாய்ந்த விடுதலைக் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதைகள், ஸ்பானிய கவிதைகள், கதைகள் என பலவிதமான புத்தகங்கள் படித்தார். ஸ்பெயினிலிருந்து மாமா அனுப்பிய செய்தி ஏடுகள், புத்தகங்களில் யுத்தச் செய்திகளை படிப்பது சிறுவயது ஏர்னெஸ்டோவுக்கு விருப்பம். ஸ்பெயின் உள்நாட்டு யுத்தம் சிறுவயது ஏர்னெஸ்டோவிற்குள் மாற்றங்களை உருவாக்கியது. மேட்ரிட் (Madrid), டெருயெல்(Teruel), குயுரென்சியா(Querencia) நகரங்களின் வீரம் செறிந்த இராணுவ போராட்டங்கள் அவரை வெகுவாக கவர்ந்தது. அவரது அறையில் ஸ்பெயின் நாட்டு வரைபடம் வைத்து அதில் படைகளை நகர்த்தி விளையாடினார். வீட்டு தோட்டத்தில் யுத்தகளங்கள், பதுங்குகுழிகள் மலைகள் போல அமைத்து வைத்திருந்தார் சிறுவயது ஏர்னெஸ்டோ.
~o00o~
கியூபாவில் நடந்த இராணுவ புரட்சிக்கு பின்னர் புதிய அரசியல் சட்டம் உருவானது. புதிய அரசியல் அமைப்பு சட்டம் குடிமக்களுக்கான சமூக உரிமைகள், வேலைவாய்ப்பு, சம ஊதியம், சமூக பாதுகாப்பு திட்டங்கள் என நல்ல பல திட்டங்களை உள்ளடக்கியிருந்தது. தனிநபர்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் கட்டுப்பாட்டில் குவித்து வைத்திருந்த பெரிய பண்ணை நிலங்களை சட்டத்துக்கு புறம்பானதாக்கியது. வெளிநாட்டு நிறுவனங்களின் தலையீட்டை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி, நிலசீர்திருத்தத்தை வலியுறுத்தியது புதிய அரசியல் சட்டம். அதன் பின்னர் 1940ல் நடந்த தேர்தலில் பாடிஸ்டா அதிபராக போட்டியிட்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அந்த தேர்தலில் தனது பழைய எதிரி சன் மார்டினை தோற்கடித்து கியூபவின் 14வது அதிபராக பதவியேற்றார் பாடிஸ்டா. பாடிஸ்டாவின் அரசு 1943 இல் கம்யூனிஸ்டு கட்சியை சட்டப்படி செயல்பட அனுமதித்தது. அமெரிக்காவுடன் வியாபார தொடர்புகள் அதிகரித்தன. யுத்தவரி என்ற பெயரில் கியூபா மக்கள் மீது கடும் வரிச்சுமை உருவானது. இதன் பிரதிபலிப்பு அடுத்து 1944இல் நடந்த தேர்தலில் சன் மார்டின் வெற்றிபெற்று பாடிஸ்டாவை பதவியிலிருந்து இறக்கினார். வெற்றிபெற்று வந்த புதிய அதிபர் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்தார். பதவிக்கு வந்ததும் அரசியல் சட்டத்தை முறையாக செயல்படுத்த துவங்கியது. அதனால் அமெரிக்காவின் ஆதிக்கம் கியூபாவில் தளர துவங்கியது. அமெரிக்காவின் நிழல் விளையாட்டுக்கள் மீண்டும் கியூபாவில் ஆரம்பமானது.
(வரலாறு வளரும்)

Friday, March 11, 2011

சே குவேரா: வரலாற்றின் நாயகன் - 2


ஜூன் 14, 1928 அர்ஜென்டினாவின் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்லிருந்து (Buenos Aires)400 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ரொசாரியோவிலுள்ள ஒரு வீடு. ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ், சிசிலியா டெ ல செர்னா தம்பதியர் தங்களுக்கு அன்று பிறந்த தலைப்பிள்ளையை முத்தமிட்டு மகிழ்ந்தனர். அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக தங்களது பெயர்களின் பாதியை இணைத்து ஏர்னெஸ்டோ குவேரா டெ ல செர்னா என பெயர் சூட்டினர்.

அப்போது குவேரா தம்பதிக்கு தெரிந்திருக்கவில்லை தனது மகனுக்கு வரலாற்றில் வேறு பெயர் பதிவு செய்யப்படும் என்பது. குட்டிப்பையனாக இருந்த ஏர்னெஸ்டோவுக்கு குறையற்ற விதத்தில் குழந்தை பருவம் அமைந்தது. சொந்தமாக மூலிகை தேயிலை பண்ணையிருக்குமளவு வளமானது ஏர்னெஸ்டோவின் குடும்பம். ஏர்னெஸ்டோவுக்கு ஒரு வயதிருக்கும் பொழுது ரோசாரியோவிலிருந்து அந்த பண்ணைக்கு குடிபுகுந்தார்கள் அங்கு ஏர்னெஸ்டோவுக்கு தங்கை ஒருவர் கிடைக்கப்பெற்றார். அவரது 2வது வயதில் விளையாடிக் கொண்டிருந்த நேரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் ஆஸ்துமா நோயிருப்பது கண்டறியப்பட்டது. ஏர்னெஸ்டோவின் மூன்றாவது வயதில் அவரது குடும்பத்தினர் தலைநகர் புயெனெஸ் எயர்ஸ்க்கு இடம் பெயர்ந்தார்கள். அங்கு அவருக்கு தம்பியொருவர் பிறந்தார். ஏர்னெஸ்டோவின் ஆஸ்துமா அதிகமானதால் அவரது உடல் நலனுக்கேற்ற காலநிலையுள்ள அல்டா கிரேசியா என்ற நகரில் குடிபெயர்ந்து, சுமார் 10 வருடங்கள் அங்கு வாழ்ந்தார்கள்.

நோய்வாய்ப்பட்டதால் அதிகமாக புத்தகம் படிப்பதும், சிறு வயதிலேயே அறிவுக்கருத்துக்களால் நிரம்பிய சிந்தனைவாதியாகவுமே காணப்பட்டார் ஏர்னெஸ்டோ. சிறு வயதில் ஏர்னெஸ்டோ தனது தாயாருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். தாயார் அவரை சுயமாக சிந்தித்து வளரும் தன்மை மிக்கவராக வளரத் தூண்டினார். விடுமுறையில் குடும்பம் சந்தோசமாக பொழுதை கழித்துவந்தனர். தந்தையார் வைத்திருந்த படப்பிடிப்பு கருவியால் ஏர்னெஸ்டோவை படம் பிடிப்பது வாடிக்கை. அவரது 9வது வயதில் ஸ்பெயினில் உள்நாட்டு யுத்தம் ஏற்பட்டது. அவரது மாமா அர்ஜெண்டினாவில் ஒரு பத்திரிக்கைக்கு யுத்தச்செய்திகள் சேகரித்து வந்தார். அதனால் சிறுவயதிலேயே யுத்தம் சம்பந்தமான நேரடி செய்திகளை மாமாவிடமிருந்து கேட்டு தெரிந்துகொண்டார் ஏர்னெஸ்டோ. அது தான் ஏர்னெஸ்டோவின் அரசியல் பாடத்தின் துவக்கம். அங்கிருந்து துவங்கிய இந்த அலை அவரை சமூகத்தின் அவலங்களை தேட வைத்தது.

அர்ஜென்டினாவில் ஏர்னெஸ்டோ வளர்ந்து கொண்டிருக்கையில், கியூபாவில், பாடிஸ்டா அதிகாரத்தை கைப்பற்றியதன் பின் அமெரிக்க வல்லரசு பாடிஸ்டாவின் எதிராளிகளை சரிகட்டி அமெரிக்க நிறுவனங்களை அங்கே நிறுவ ஆரம்பித்தது. இடைக்கால அதிபராக இருந்த ரமோன் கிரயு சன் மார்டினுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு, புதிய அதிபராக கார்லோஸ் மெண்டியெட்டா அமர்த்தபட்டார். அமெரிக்கா இந்த புதிய அரசை உடனடியாக அங்கீகரித்தது. மே 29, 1934 குயான்றனாமோ பே (Guantánamo Bay) தீவை பயன்படுத்த உடன்படிக்கையை கியூபாவுடன் எற்படுத்தியது அமெரிக்கா. அன்று முதல் இன்று வரை அந்த தீவு அமெரிக்காவின் வசம்.
தொடர்ந்து வந்த அமெரிக்க ஆதரவு பாடிஸ்டாவை பலம் மிக்கவராக மாற்றியது. பாடிஸ்டா பல நிழல் உலக வர்த்தக பிரமுகர்களுடன் தொடர்பை வலுப்படுத்தினார். இந்த தொடர்புகள் வழியாக பல சூதாட்ட விடுதிகள் ஹவானாவில் திறக்கப்பட்டது. அமெரிக்க நிறுவனங்களுக்கு பாடிஸ்டா அதிகாரத்திலுள்ள நண்பனாக இருந்தார். அரசு நிர்வாகம் லஞ்சமும், ஊழலுமாக மக்களுக்கெதிராக நடந்துகொண்டிருந்தது. மாணவர்களும், பொதுவுடமையாளர்களும் எதிர்ப்புகளை காட்டிய வண்ணமிருந்தனர். பல எதிர்ப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பாடிஸ்டாவை கொல்லவும் முயற்சிகள் நடந்தன. மாணவர் தலைவர் ஒருவர் எழுதிய கடிதத்தில் பாடிஸ்டா பற்றி "புரட்சி என ஒன்று நடந்தால், தான் தப்பிச் செல்ல விமானம் ஒன்றை தயாராக வைத்திருக்கும் குணமுடையவர்" என்றார். கியூபாவில் அதிபருக்கான தேர்தலும் வந்தது.


(வரலாறு வளரும்)
திரு

Monday, March 7, 2011

சேகுவேரா வரலாற்றின் நாயகன்-1

17 ஆண்டுகளுக்கு முன்னர் சேகுவேரா பற்றி முதலில் படிக்கத் தொடங்கியது முதல் என்னை விடாமால் துரத்திய இந்த வரலாற்று நாயகனை, வாழ்வை, அவரது போராட்ட வரலாற்றை, அவரது தாக்கத்தை தேட ஆரம்பித்தேன். அவரைப் பற்றிய புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் என தொடர்ந்த தேடலின் விளைவு இந்த தொடர். கடந்த வருடம் பனித்துளி என்ற வலைப்பதிவில் சேகுவேரா பற்றி எழுத துவங்கினேன். வேறு பதிவுகளில் கவனம் செலுத்தியதால் வரலாற்றின் நாயகனை பற்றி எழுதுவதில் தடங்கல் ஏற்பட்டது. தொடர்ந்து சே வரலாறை ஆலமரத்தில் எழுதுவேன்.

இந்த தொடர் முழுவதும் சே அவர்களை பற்றியதாக இருந்தாலும் சேகுவேராவின் கொள்கையை ஆதரிக்கிற பல சாதாரண மனிதர்களை உலகின் சில பகுதிகளிலிருந்து அவ்வப்போது அறிமுகம் செய்கிறேன். அது சேகுவேரா என்ற வரலாற்று நாயகனின் தாக்கத்தை அறிந்துகொள்ள உதவும். உங்களது அரிய ஆலோசனைகள், தகவல்கள், திருத்தங்களை ஆவலுடன் எற்க தயாராக காத்திருப்பேன்.

விடுதலை வேள்வியில் ஒளி சேர்க்கிற அனைவருக்கும் இந்த தொடர் அர்ப்பணம்.

சேகுவேரா - வரலாற்றின் நாயகன் - 1
ஜனவரி1, 1959 உலகமே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. குயூபா அதிபர் பாட்டிஸ்டா தனது பணிதுறப்பு (இராஜினாமா, resignation) செய்தார். பணிதுறப்பு செய்ததும் இரவோடு இரவாக தனது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ அதிகாலை 3 மணிக்கு கேம்ப் கொலம்பியா விமானதளத்திலிருந்து நாட்டை விட்டு வெளியேறினார். அவர் அடைக்கலமாய் சேர்ந்த இடம் டொமினிக்கன் குடியரசில். அதே வேளை ஹவானா முதல் குயூபாவின் தெருக்களில் புரட்சியாளர்கள் மக்கள் வரவேற்புடன் கூடிய நடமாட்டங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. பாட்டிஸ்டாவின் அரசில் அதிகாரம் செலுத்தியவர்களை காப்பாற்றி ஐக்கிய அமெரிக்க தேசத்தின் (USA) மயாமி, நியூ ஓர்லியன்ஸ், ஜாக்ஸன்வில் நகரங்களுக்கு கொண்டு செல்ல அன்று இரவு பல விமானங்கள் கேம்ப் கொலம்பியாவிலிருந்து பறந்துகொண்டிருந்தது. தன்னையும், தனது நெருங்கிய சகாக்களையும் காப்பாற்றுமளவு வல்லமை பொருந்திய அமெரிக்காவின் ஆதரவு தனக்கிருந்தும் பாட்டிஸ்டா எதற்காக நாட்டை விட்டு வெளியேறினார்? அவரை வெளியேற்றுமளவு வீறுகொண்ட புரட்சிக்கு காரணமென்ன? விடைகாண இன்னும் 26 வருடங்களுக்கு பிந்தைய கியூபாவுக்கு வாருங்கள்.

செப்டெம்பர் 4, 1933 கியூபாவில் 'சிப்பாய்கள் கலகம்' என்ற இராணுவ புரட்சி நடந்தது. ஜெரால்டொ மசாடோ தலைமையிலான அரசு அன்றைய இராணுவ புரட்சியில் வீழ்ந்தது. 33 வயது நிரம்பிய பாடிஸ்டா கியூபாவின் அரசு அதிகாரத்தை கைப்பற்றினார். அப்போது முதல் இராணுவத்தின் விளையாட்டுகள் அரச அதிகாரத்தில் ஆரம்பமானது. பாடிஸ்டா தன்னை இராணுவத்தலைவராக, அரசை உருவாக்கும் வல்லமையுள்ளவரா, அமெரிக்காவின் ஆதரவு பெற்றவராக உயர்த்தினார். பின்னர் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் அன்பிற்குரியவராக மாறிய இந்த பாடிஸ்டா யார்?

********
பாடிஸ்டா பிறந்தது கியூபாவின் ஓரியன்டே மாகாணத்தில் ஜனவரி 16, 1901. இனக்கலப்பு (வெள்ளை, இந்திய, சீன, கருப்பின) கொண்ட கரும்பு விவசாய குடும்பத்தில் மகனாக பிறந்த இந்த சிறுவனின் பெயர் ரூபன் புல்ஜென்சியோ பாட்டிஸ்டா சால்திவர். சிறுவயதிலேயே பொருளாதார பிரச்சனைகளை சந்தித்த பாடிஸ்டா பகலில் வேலைக்கு சென்று இரவில் பள்ளிக்கு சென்றார். புத்தகங்கள் படிப்பதே தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தவர் பாடிஸ்டா. 1921 இல் இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் சேர ஹவானாவுக்கு செல்ல பயணம் செய்வதற்காக கைக்கடிகாரத்தை அடகுவைத்தார். பொருளாதார பிரச்சனையான பின்னணியிலிருந்து வந்த பாடிஸ்டா 1932இல் சார்ஜெண்டாக பதவியுயர்வு பெற்று மறுவருடத்தில் ஆட்சியை கைப்பற்றுமளவு வளர்ந்தார். அதே நேரம் பாடிஸ்டாவின் அதிகாரத்தையே அப்புறப்படுத்த போகிற ஒருவர் பிறந்து ஆறு வருடங்கள் கடந்திருந்தது பாடிஸ்டாவின் கழுகுப்பார்வையில் தெரியவில்லை. அதுவும் தனது மாகாணத்தில் மிக அருகில் அவர் இருப்பதை. யார் அவர்?

*********
பாடிஸ்டா பிறந்த அதே ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது (உண்மை கடிதமா தெரியவில்லை, யாரவது தெரிந்தால் உறுதிபடுத்துங்கள்). அந்த சிறுவயது காஸ்ட்ரோவுக்கு தெரியாது அமெரிக்காவை அலற வைக்கிற வலிமை தன்னிடமிருப்பது. குடும்பத்தின் அரவணைப்பில் கியூபாவின் சந்தியாகு, ஹவானாவில் உயர்தர கிறிஸ்தவ பள்ளிகளில் கல்வி கற்றார். 1945இல் சட்டம் பயில துவங்கி 1950இல் ஹவானா பல்கலைப்பட்டம் வாங்கினார். 1948இல் மிர்றா டியஸ் பலர்ட் என்ற பெண்ணை மணந்தார். அவரது திருமணத்திற்கு பாடிஸ்டா கணிசமான தொகையில் பரிசனுப்பினார். இருந்தும் பாடிஸ்டாவின் ஆட்சியை அப்புறப்படுத்த இளைஞர்களை திரட்டி புரட்சிக்கு புறப்பட்டார் பிடல் காஸ்ட்ரோ. அவரை இந்த புரட்சிகர நிலைக்கு தள்ளியது எது? இதனால் கியூபாவின் சரித்திரம் மட்டுமல்ல, உலகின் பார்வையும், விடுதலைப்போரியலில் புதிய வழிமுறையும் பிறக்கபோவது அப்போது அவருக்கு தெரியுமா? அவருக்கு துணையாக புறப்பட்டு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய அந்த சரித்திர மனிதன் யார்?

வரலாறு விரியும்...

Saturday, March 5, 2011

ஓர் நற்செய்தி

ஓர் நற்செய்தி தி மு க காங்கரஸ் கூட்டணி முறிவு
மத்திய அமைச்சரவைளிருந்து தி மு க விலகல்  உலக தமிழர்களுக்கு ஒரு இன்பமான செய்தி அனைவரும் கொண்டாடுங்கள் காங்கரசை   நாட்டை விட்டு விரட்ட இதுவே முதல் படி லட்சக் கணக்கான தமிழர் கலை கொள்ள துணை போன காங்கரசை நாட்டை விட்டு விரட்டுங்கள் தமிழ் மக்களே இப்போ நடக்க இருக்கிற தேர்தலில் எந்த கட்சி வேணும்னாலும் வரட்டும் காங்கரஸ் ஒரு தொகுதி கூட வரகூடாது தமிழக வாகலர்களே சிந்தித்து வாக்களயுங்கள் தமிழ்நாட்டைவிட்டு காங்கரசை விரட்டுவோம் அனைத்து தமிழர்களும் ஒற்றுமையாய் இருப்போம் 

உங்களுடன்

இதயக்கனி