விழி மூடி எனக்குள் பேசும் மௌனம்
உடைந்த இதயத்தை அள்ளி
ஒட்டுப் போட்டுக் கொண்டு
மனம் தவிக்குது எதற்காக?
யோசிக்கிறேன்....
பூமியில் பாதம் பரப்பிய தேவதை
என் முன் கடந்து சென்றதால்
மின்னல் மின்னி
இடி இடித்தது என் நெஞ்சுக்குள்
இதுவரை நான் காணாத
புரியாத உலகம்
என் முன் கடந்து போனதை
கண் இமைக்காமல் பார்த்தேன்.
ஆணி வேராக என்இதயத்தை
தாக்கிவிட்டுச் சென்றவள்
காணும் காட்சிகள் யாவும்
அவள் பிம்பமாக மாற்றி விட்டாள்.
எவ்வளவு முயன்றாலும்
அவள் நினைவுகளில்
இருந்து நீந்தாமல்
இருக்க முடியவில்லை.
என் நினைவு அலைகளில்
அவள் கடல் அலைகளாக
நான் துடுப்பு இல்லை...
படகோட்டியாக.
அன்புடன்,
ஸ்ரீமாரியா.
No comments:
Post a Comment